பாலிவுட் சினிமா ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய புதிய ஆக்ஷன் திரில்லர் படம் ‘துரந்தர்’, ரன்வீர் சிங்கின் திறமையான நடிப்பால் திரையரங்குகளில் ஒரு சாதனையை பதிவு செய்துள்ளது. இயக்குநர் ஆதித்யா தார் இயக்கத்தில் உருவாகிய இந்த படம், கடந்த ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி, தற்போது 30 நாட்களைப் பூர்த்தி செய்துள்ளது.
‘துரந்தர்’ படத்தில் ரன்வீருக்கு இணையாக மாதவன், அக்ஷய் கன்னா, அர்ஜுன் ராம்பால், சஞ்சய் தத் மற்றும் சாரா அர்ஜுன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இவர்களது நடிப்பு மற்றும் கதாபாத்திரங்களின் தாக்கம் படத்தை மேலும் பிரபலமாக்கியுள்ளது. படம் வெளியான முதல் நாளிலிருந்தே ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது.
படக்குழுவின் சமீபத்திய அறிவிப்பின்படி, ‘துரந்தர்’ இன்றுடன் உலகளவில் ரூ.1240 கோடி வசூல் செய்துள்ளது. இது உலக திரையரங்குகளில் புதிய சாதனையாகும். உலகளாவிய அளவில் வசூல் சாதனை காணும் படங்களில் ‘துரந்தர்’ பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.
Marking a month of unprecedented dominance 🔥💥
Book your tickets.
🔗 - https://t.co/cXj3M5DFbc#Dhurandhar Making Records Worldwide.@RanveerOfficial #AkshayeKhanna @duttsanjay @ActorMadhavan @rampalarjun #SaraArjun @bolbedibol @AdityaDharFilms #JyotiDeshpande @LokeshDharB62… pic.twitter.com/pRyE5G49cm
Listen News!