• Apr 16 2026

தல.! தல.! என்று கூச்சலிட்ட ரசிகர்களுக்கு.. இப்படி ஒரு ரெஸ்பான்ஸா.? வைரலான அஜித்தின் செயல்!

shali / 5 months ago

Advertisement

Listen News!

சினிமா ரசிகர்களிடையே பெரும் மதிப்பும் மரியாதையும் பெற்ற நடிகர் அஜித் குமார், தனது எளிமை, ஒழுக்கம், மற்றும் அடக்கமான தன்மையால் எப்போதும் ரசிகர்களின் மனதில் தனி இடத்தைப் பிடித்துள்ளார். தொழில் ரீதியாக மட்டுமல்லாமல், தனிப்பட்ட வாழ்க்கையிலும் ஒரு சிறந்த மனிதராக விளங்கும் அஜித், சமீபத்தில் திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வரர் கோயிலுக்கு விஜயம் செய்துள்ளார்.


அஜித் குமார் திருப்பதி கோயிலுக்கு வந்து, சுப்ரபாத சேவையில் கலந்து கொண்டார். காலை நேரத்தில் சாமி தரிசனம் செய்தபோது, அவருடன் சில நெருங்கிய நண்பர்களும் இருந்தனர். வழக்கம்போல் எந்த வித விசேஷத்துடனும் இல்லாமல், சாதாரண உடையுடன், எளிமையாகவே அவர் கோயிலுக்கு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த நேரத்தில் கோயிலுக்குள் இருந்த பக்தர்கள், அஜித்தை கண்டதும் பெரும் ஆரவாரம் செய்தனர். பலரும் “தல! தல!” என்று கூச்சலிட்டனர். சிலர் அவரை நோக்கி கை அசைத்து மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினர். ஆனால், அஜித் குமார் அவர்களின் அந்த ஆர்வத்துக்கு பதிலாக அமைதியாக இருக்குமாறு சைகை மூலம் கேட்டுக் கொண்டார்.


அந்த காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. பலரும் அந்த வீடியோவை பகிர்ந்து கொண்டு, “அஜித் எவ்வளவு எளிமையானவர்!”, “அவரின் ஒழுக்கம் அனைவருக்கும் முன்மாதிரி” என்று புகழ்ந்து வருகின்றனர்.


Advertisement

Advertisement