சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று, பொலீஸ் அதிகாரி அருணிட்ட நாம தானே மக்களைப் பாராட்டனும் அப்ப தானே அவங்களுக்கும் உதவி செய்யணும் என்ற எண்ணம் வரும் என்கிறார். அதுக்கு அருண் இல்ல சார் அவன் அப்படி ஒன்னும் பெருசா பண்ணேல கூட இருந்தான் அவ்வளவு தான் என்கிறார். அதனை அடுத்து பொலீஸ் அதிகாரி நீ சொல்லுற மாதிரி நடந்திருந்தால் உனக்குத் தானே அந்த அம்மா செயினை போட்டிருப்பாங்க என்று சொல்லுறார்.
பின் சீதா அருணுக்கு போன் எடுத்து பாத்தீங்களா அந்த லேடி வந்து மாமாக்கு கிப்ட் எல்லாம் கொடுத்திருக்காங்க அப்ப எங்கட மாமா தானே அவங்களைக் காப்பாத்தினது என்று சொல்லுறார். மேலும் நீங்க ஏன் மாமா ஹெல்ப் பண்ணார் என்ற விஷயத்தை சொல்லல என்று கேட்கிறார். அதுக்கு அருண் ஒன்னுமே கதைக்காமல் அமைதியாக இருக்கிறார்.
இதனை அடுத்து அருணின்ட அம்மா அவரைப் பாத்து இந்த பிரச்சனை வாறதுக்கு காரணம் உன்னோட பிடிவாதக் குணம் தான் என்கிறார். மேலும் நீ சீதாவை மறந்திடு நான் உனக்கு வேற ஒரு பொண்ணைப் பாக்குறேன் என்று சொல்லுறார். பின் முத்துவு அந்த அம்மா கொடுத்த செயினைக் கொண்டு வந்து சீதாவுக்குப் போடுறார்.
அதனைத் தொடர்ந்து அருண் முத்துவைப் பாத்து பரவாயில்ல அந்த அம்மா உன்னத் தேடிவந்து செயின் எல்லாம் கொடுத்திருக்காங்க போலயே என்கிறார். அதுக்கு முத்து அதுக்குள்ள பலகுரல் வீடியோவை போட்டுட்டு என்று சொல்லுறார். பின் ரோகிணி விஜயாவோட கதைக்கிறதுக்கு ஹெல்ப் பண்ண சொல்லி பார்வதி கிட்ட போய் நிற்கிறார். இதுதான் இன்றைய எபிசொட்.
Listen News!