பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆனவர் மாரிசெல்வராஜ். அதைத்தொடர்ந்து 'கர்ணன், மாமன்னன்' போன்ற வெற்றிப் படங்களை இயக்கி தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை பிடித்து வைத்திருக்கிறார்.

சமீபத்தில் வெளியான 'வாழை' படம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தற்போது துருவ் விக்ரம் நடிப்பில் 'பைசான்' திரைப்படத்தை இயக்கி வருகிறார். மாரி செல்வராஜ் அடுத்ததாக கார்த்தியை வைத்து புதிய படம் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
d_i_a

இது மாரி செல்வராஜின் தந்தையுடைய வாழ்க்கை கதை என்பதை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் கூறியுள்ளார்.இப்படத்தின் ஒன் லைனை கார்த்தியிடம் ஏற்கனவே மாரி செல்வராஜ் தெரிவித்து இருப்பதாகவும், அதற்கு கார்த்தி ஒப்புக் கொண்டுள்ள நிலையில் விரைவில் இப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Listen News!