• Mar 12 2026

திவாலானவர் என அறிவிக்க தயாரா..? விஷாலுக்கு கேள்வியெழுப்பிய சென்னை உயர்நீதிமன்றம்

shali / 3 months ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் தனது நடிப்பு மற்றும் தயாரிப்பாளர் பணியால் பிரபலமான விஷால் மற்றும் லைகா நிறுவனம் இடையேயான சட்டப்போராட்டம் தற்பொழுது புதிய திருப்பத்தை சந்தித்துள்ளது.


இந்த வழக்கு, லைகா நிறுவனத்தின் 21 கோடி 29 லட்சம் ரூபாய் நிலுவை தொகையை வட்டியுடன் வழங்க வேண்டும் என பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் பின்னணி சம்பந்தமாக உருவாகியுள்ளது. இதன் காரணமாக, சென்னை உயர் நீதிமன்றம் தற்பொழுது விஷாலுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் புதிய கேள்விகளை எழுப்பியுள்ளது.

சில வருடங்களுக்கு முன், லைகா நிறுவனம் விஷாலுக்கு எதிராக பணம் திருப்பி செலுத்தப்படாமை குறித்த மனுவை தாக்கல் செய்தது. மனுவில் குறிப்பிட்ட படி, விஷால் தனது நிறுவனத்திற்கு 21 கோடி 29 லட்சம் ரூபாய் திருப்பி வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.


அந்த உத்தரவில், 30 சதவீத வருடாந்திர வட்டி சேர்க்கப்பட்டு தொகையை திருப்பிச் செலுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 

இதற்கு நடிகர் விஷால், " 30 சதவீத வருடாந்திர வட்டி உத்தரவு சட்டவிரோதம். நான் பெரிய பணக்காரன் அல்ல." எனப் பதிலளித்திருந்தார்.

இந்நிலையில், தற்பொழுது நடிகர் விஷாலுக்கு எதிராக லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் திவாலானவர் என அறிவிக்க தயாரா என்று விஷாலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது. இந்தக் கேள்வி, வழக்கின் அடுத்த கட்டத்திற்கு முக்கிய திருப்பமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. 

Advertisement

Advertisement