• Nov 25 2025

சக நடிகையின் வாய்ப்பைக் கெடுத்த வடிவேல்.! பலரும் அறிந்திடாத சுவாரஸ்யமான தகவல்கள்...

subiththira / 1 week ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் “24ம் புலிகேசி” என்ற படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் உருவாக இருந்தது. இப்படத்தின் இயக்குநராக சிம்பு தேவன் இருந்தார், மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் பலர் நடிப்பது உறுதி செய்யப்பட்டது. பின்னர் அப்படத்தின் படப்பிடிப்பு இடையிலேயே நின்றுவிட்டது.


இந்நிலையில், சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட நடிகை ஆர்த்தி கணேஷ் சமூக வலைத்தளங்களில் இப்படம் குறித்த சில உண்மைகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளார். 

நடிகை ஆர்த்தி கணேஷ் கூறுகையில், " 24ம் புலிகேசி பட இயக்குநர் சிம்பு தேவன் சார் எனக்கு ஒரு கரெக்டர் கொடுத்து அட்வான்ஸ் எல்லாம் கொடுத்து டேட் எல்லாம் கொடுத்தார். அந்தப் படத்தில சரளா அக்காவும் நடிக்கிறதா இருந்திச்சு. அதுக்கப்புறம் திடீர்ன்னு படம் தள்ளிபோகுது உங்க டேட்ஸ்ஸ வேற யாருக்காவது கொடுத்திடுங்கன்னு சொன்னாங்க. 

ஆனா திடீர்னு அதே தேதில ஷூட்டிங் நடந்திட்டிருக்கு. நான் என்னன்னு சிம்பு தேவன் சாரைக் கேட்டால், "அவர் ஆர்த்தி, கோவை சரளாவை எல்லாம் மக்கள் மறந்திட்டாங்க.. அந்த மூஞ்சிங்க வேணாம்னு வடிவேல் சொல்லிட்டாரு" என்றார். ஆனா, கடைசில அந்தப் படமே நின்னு போச்சு.." என தனது வருத்தத்தைத் தெரிவித்துள்ளார்.


இந்த விளக்கம், படத்தின் முன்னேற்றம் மற்றும் நடிகர்கள் இடையேயான நேர்மறை நிலையை பிரதிபலிக்கிறது. ஆனால், இந்தச் சூழ்நிலை ஆர்த்தி கணேஷ் மனதில் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement