தமிழ் சினிமா ரசிகர்களிடையே விருப்பத்தை உருவாக்கும் மிக முக்கியமான ஊடகச் சக்தியாக விமர்சனங்கள் காணப்படுகின்றன. தற்போது இந்த விமர்சனங்கள் மிகுந்த பாகுபாடு கொண்டிருப்பதாக திரைப்பட வட்டாரத்தில் பலர் தெரிவிக்க, அந்த உண்மையை தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளார் தயாரிப்பாளர் தனஞ்செயன்.
தனஞ்செயன் அதன்போது, “சின்ன பட்ஜெட் படங்களை காசு கொடுக்காததனால் ரிவ்யூ பண்ணமாட்டாங்க. இதனால் மெட்ராஸ் மேட்னி, பரமசிவன் பாத்திமா மாதிரியான படங்கள் நல்லா இருந்தும் வெளியே தெரியவில்லை." என்றார்.
அத்துடன்,"பெரிய பட்ஜெட் படங்களுக்கு காசு கொடுக்கவில்லை என்றால் நெகட்டிவான விமர்சனங்கள் செய்து படத்தை ஓட விடாமல் செய்கின்றனர். அப்படித் தான் கங்குவா மற்றும் தக்லைஃப் போன்ற படங்கள் தமிழ் நாட்டில் அடி வாங்கியது." எனவும் ஓபனாக தெரிவித்திருந்தார்.
Listen News!