• Mar 11 2025

இப்தார் நிகழ்ச்சியால் சிக்கலில் சிக்கிய தளபதி...! விஜய்க்கு ஆதரவு கிடைக்குமா?

subiththira / 14 hours ago

Advertisement

Listen News!

இப்தார் நிகழ்ச்சியில் இஸ்லாமியர்களை இழிவுபடுத்தியதாக தமிழ்நாடு வழக்கறிஞர்கள் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு சுன்னத் ஜமாஅத் அமைப்பு சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளது. தற்பொழுது இந்த தகவல் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.

மேலும் தவெக சார்பில் நடைபெற்ற இப்தார் நிகழ்ச்சியில் விஜய் சில கருத்துகள் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இந்த கருத்துகள் இஸ்லாமிய சமூகம் குறித்து அவமதிப்பாக இருந்ததாகவும் இது மத ஒற்றுமையை பாதிப்பு செய்யக்கூடியதாகவும் சுன்னத் ஜமாஅத் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.


இந்த சம்பவம் குறித்து தமிழ்நாடு சுன்னத் ஜமாஅத் அமைப்பின் முக்கிய நிர்வாகிகள், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு சென்று முறையிட்டனர். புகாரில், "இப்தார் நிகழ்ச்சி இஸ்லாமியர்களின் புனிதமான ஒன்றாகும். ஆனால், தவெக தலைவர் விஜய், இந்நிகழ்ச்சியில் இஸ்லாமியர்களை இழிவுபடுத்தும் வகையில் கருத்து தெரிவித்தார். இது மதக் கலவரத்தை தூண்டும் வகையில் இருக்கிறது. எனவே, அவர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்தார் நிகழ்ச்சியில் விஜய் எவ்வாறு பேசினார், அவர் என்ன கருத்து தெரிவித்தார் என்பதற்கான வீடியோ காட்சிகள் தற்போது சமூக ஊடகங்களில் பரவுகின்றன. சிலர் இதனை தவறாக எடுத்துக்கொண்டிருக்கலாம்  என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.

தவெக தலைவர் விஜய், இதுகுறித்து இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. ஆனால், அவர் தனது அறிக்கையில், "என்னுடைய பேச்சு தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. நான் மதங்களை அவமதிக்க விரும்பவில்லை" என்று கூறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement