• Oct 12 2025

சிவகார்த்திகேயனுக்கு கிடைத்த அங்கீகாரம் எனக்கு ஏன் கிடைக்கல.? ஆதங்கத்தில் சாந்தனு.!

subiththira / 7 hours ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் கடந்த சில ஆண்டுகளாகவே, உழைப்பின் மூலம் முன்னேறும் நடிகர்கள் பெரிதும் பேசப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், தனது பிறப்புப் பின்னணியால் தான் பெற வேண்டிய அங்கீகாரம் தடுக்கப்படுவதாக நடிகர் சாந்தனு பாக்கியராஜ் சிந்தனை சேர்ந்த ஒரு முகப்படுத்தலுடன் சில கருத்துகளைக் கூறியுள்ளார்.


சமீபத்தில் நடைபெற்ற ஒரு நேர்காணலில், உண்மை உணர்வுகளை வெளிப்படுத்திய சாந்தனு, தன்னுடைய வாழ்க்கை பயணத்தை பற்றியும், சினிமாவில் முன்னேறுவதில் ஏற்படும் சவால்களைப் பற்றியும் திறம்பட பகிர்ந்திருந்தார். 

நேர்காணலின் போது சாந்தனு, “நான் அடுத்த ஜென்மத்தில சிவகார்த்திகேயனாவோ அல்லது மணிகண்டனாவோ பிறக்கணும்னு தான் ஆசைப்படுறேன். ஏன்னா அவங்க எல்லாம் அந்த பேக்கிரவுண்டில்  இல்லாமல், ஒரு அடிப்படை ஸ்டேஜில இருந்து வளர ஆரம்பிச்சாங்க.. ஆனா, அவங்கள மாதிரி தான் நானும் அடிப்படையிலிருந்து ஆரம்பிச்சேன்.. ஆனா சாந்தனு என்ன பண்ணியிருக்கான்னு பார்க்காமல் பாக்கியராஜ் பையன் என்ன பண்ணியிருக்கான்னு தான் பார்க்கிறாங்க..” என்றார். 


இந்த உரையாடல் சினிமா ரசிகர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பலரும் இது ஒரு உண்மையான உணர்ச்சியின் வெளிப்பாடு என தெரிவித்துள்ளனர்.

அத்துடன் சாந்தனு, " பாக்கியராஜ் குடும்பத்தில பிறக்கணும்னு நானா ஆசைப்பட்டேன்.." எனவும் கேள்வியெழுப்பியுள்ளார். சாந்தனுவின் இந்த கருத்துகள், தற்பொழுது திரைத்துறையின் நிஜ முகத்தை வெளிக்கொணர்கின்றது. 

Advertisement

Advertisement