• Sep 29 2025

துல்கர் சல்மான் – பிரித்விராஜ் வீடுகளில் ரெய்டு.! நடந்தது என்ன.? அதிர்ச்சியில் ரசிகர்கள்.!

subiththira / 5 days ago

Advertisement

Listen News!

கடந்த சில மணித்தியாலங்களாக பரபரப்பான நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன. புகழ்பெற்ற நடிகர்கள் துல்கர் சல்மான் மற்றும் பிரித்விராஜ் வீடுகளில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். இந்த நடவடிக்கை கேரளா வர்த்தக மற்றும் வருவாய் துறைகளுக்கு பெரும் அதிர்ச்சியாக இருக்கிறது. தற்போது வெளியாகிய தகவல்களின் படி, பூட்டான் நாடு வழியாக கார்கள் இறக்குமதி செய்யப்பட்ட வழக்கில் விசாரணை நடைபெற்று வருகிறது.


இந்த ரெய்டு சம்பவம் இன்று காலை, துல்கர் சல்மான் மற்றும் பிரித்விராஜ் வீடுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொச்சி நகரில் அமைந்துள்ள துல்கர் சல்மானின் வீட்டில் அதிகாரிகள் விரிவான சோதனையை தொடங்கி, அதேபோல் பிரித்விராஜ் வீட்டிலும் விசாரணை நடைபெற்று வருகிறது. 

தற்போது முன்வைக்கப்பட்டுள்ள தகவல்களின் படி, பூட்டான் நாடு வழியாக இந்தியாவுக்குள் கார்கள் இறக்குமதி செய்யப்பட்டதில் சட்டவிரோதங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் சுங்கத்துறை தீவிர விசாரணை நடாத்தி வருகின்றனர்.

இந்த ரெய்டு சம்பவம் திரை உலகிற்கு மட்டுமல்லாமல் வர்த்தக வளாகங்களுக்கும் மிகப்பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

Advertisement

Advertisement