• Feb 07 2025

திடீரென அருந்ததி பட வில்லனுக்கு கைது வாரண்ட் பிறப்பித்த நீதிமன்றம் - ஷாக்கில் ரசிகர்கள்!

subiththira / 3 hours ago

Advertisement

Listen News!

தெலுங்கு , கன்னடம் , ஹிந்தி மற்றும் பஞ்சாப் ஆகிய மொழிகளில் வில்லன் கதாப்பாத்திரத்தில் அதிகளவான படங்களை நடித்தவரே நடிகர் சோனு சூட். அதிலும் இவர் நடித்த தபாங் , அருந்ததி போன்ற படங்கள் அதிகளவான வெற்றியை அளித்துக் கொடுத்தது.

அதனைத் தொடர்ந்து ராஜா , சந்திரமுகி , ஜோதா அக்பர் மற்றும் சக்தி போன்ற படங்களில் நடித்துள்ளார். அத்துடன் சோனு சூட் தனது சிறந்த நடிப்பால் அதிகளவான மக்கள் மனங்களை கவர்ந்த வில்லனாக  விளங்குகின்றார். இத்தகைய நடிகர் சோனு சூட் பற்றி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதில், 10 லட்சம் மோசடி செய்த வழக்கில் இந்நடிகருக்கு பல முறை  சம்மன் அனுப்பியும் அவர் நேரில் ஆஜராகாது இருந்துள்ளார்.


இதனால் அவரை கைது செய்து கொல்வதற்கான வாரண்டை  லூதியான நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. இது சோனு சூட்டின் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி மக்கள் மத்தியில் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement