விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 9-வது சீசன் 95 நாட்களை கடந்துள்ளது. தற்போது இந்த வீட்டில் ஏற்கனவே எலிமினேட் ஆகி வெளியே சென்ற பழைய போட்டியாளர்கள் மீண்டும் என்ட்ரி கொடுத்துள்ளனர்.
இந்த நிலையில், இன்றைய தினம் வெளியான ப்ரோமோவில், பழைய போட்டியாளர்கள் ஹவுஸ் டூர் செல்ல வேண்டும். அங்கு வீட்டில் நடந்த முக்கியமான நிகழ்வுகளை பகிர்ந்து கொள்ளலாம் என்று பிக் பாஸ் அறிவித்தல் கொடுக்கின்றார்.
அதன்படி முதலாவதாக நந்தினி பிக் பாஸ் வீட்டிற்குள் தனக்கு பெயின் ஃபுல்லான இடம் இதுதான். எனக்கு ரொம்ப ஹெட்டான விஷயத்தை சான்ட்ரா பண்ணி இருக்காங்க. அவங்க பார்வதிகிட்ட பேசும் போது, ரம்யா ஒரு பாம்பு.. அவள மட்டும் நம்பவே கூடாதுன்னு சொல்லி இருக்காங்க என்று ரம்யா சொல்லுகின்றார்.
இதை தொடர்ந்து ஹவுஸ்மேட்ஸுடன் பேசிய வியானா, நான் ரெண்டு பேர் கூட வீட்டுக்கு வந்ததும் பேசி இருக்கேன்.. அதே இரண்டு பேர் என்ன பத்தி இதே லிவிங் ஏரியால கண்டபடி பேசி இருக்காங்க என்று கூறுகின்றார். இதை கேட்டதும் விக்ரம் தலை குனிந்து காணப்படுகிறார்.
Listen News!