• Feb 23 2025

ஒரே நேரத்தில் சிம்பு, சிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த நடிகை..! நயனை விட அதிக சம்பளம்..!

Sivalingam / 1 year ago

Advertisement

Listen News!

 தமிழ் சினிமாவில் நயன்தாரா மட்டுமே அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக இருந்த நிலையில் தற்போது சிம்பு மற்றும் சிவகார்த்திகேயன் படத்தில் இணைய உள்ள நடிகை, நயன்தாராவை விட அதிக சம்பளம் வாங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  

பிரபல தெலுங்கு மற்றும் ஹிந்தி நடிகையான மிருணால் தாக்கூர் நடித்த ’சீதா ராமம்’ என்ற திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து அவருக்கு தென்னிந்திய படங்களில் நடிக்க வாய்ப்புகள் குவிந்து வருகிறது.  தற்போது அவர் விஜய் தேவரகொண்டாவின் ’பேமிலி ஸ்டார்’ படத்திலும் சில  ஹிந்தி படத்திலும் நடித்து வருகிறார்.



இந்த நிலையில் முதல் முறையாக அவர் நேரடி தமிழ் படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே சிம்பு நடிக்க இருக்கும் 48வது படத்தில் நடிக்க அவரிடம் பேச்சுவார்த்தை நடந்த நிலையில் கிட்டத்தட்ட இந்த படத்தில் அவர் நடிப்பது உறுதி செய்யப்பட்டு விட்டதாக தெரிகிறது.

இதையடுத்து தற்போது அடுத்த கட்டமாக சிவகார்த்திகேயன் நடிப்பில் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்திலும் மிருணாள் தாக்கூர் தான் நாயகி என்றும் இறுதி கட்ட பேச்சுவார்த்தை தற்போது நடைபெற்று வருவதாகவும் தெரிகிறது.



தமிழ் சினிமாவில் இதுவரை அதிகமாக ஐந்து கோடி ரூபாய் சம்பளம் நயன்தாரா வாங்கிய நிலையில் சிம்பு மற்றும் சிவகார்த்திகேயன் படங்களில் நடிக்க இருக்கும் மிருணாள் தாக்கூர் ஏழு கோடி சம்பளம் கேட்டு இருப்பதாகவும் அதற்கும் தயார் நிறுவனங்கள் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஒரே நேரத்தில் சிம்பு மற்றும் சிவகார்த்திகேயன் ஆகிய இரண்டு மாஸ் நடிகர்களின் படங்களில் தமிழில் என்ட்ரி ஆகும் மிருணால் தாக்கூர் ஒரு மிகப் பெரிய ரவுண்டு வருவார்  என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement