• Jun 03 2026

மாரடைப்பு என்று சொல்கிறார்கள்… ஆனால் உண்மையில் நடந்தது என்ன? திலீப் ராஜ் இறப்பின் பின்னணி

shali / 2 weeks ago

Advertisement

Listen News!

கன்னட திரையுலகில் பிரபல நடிகராக விளங்கிய திலீப் ராஜ் (47) மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் ரசிகர்கள் மற்றும் திரையுலகினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொலைக்காட்சித் தொடர்களில் தனது நடிப்புத் திறமையால் முதலில் கவனம் பெற்ற அவர், பின்னர் திரைப்பட உலகில் காலடி எடுத்து வைத்து தனக்கென ஒரு தனி இடத்தை உருவாக்கிக் கொண்டார்.


2005ஆம் ஆண்டு வெளியான “பாய் ஃபிரண்ட்” திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமான திலீப் ராஜ், அதன் பின்னர் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்தார். குறிப்பாக, மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் நடித்த வெற்றிப்படமான “மிலானா” திரைப்படத்தில் வில்லனாக நடித்த அவரது நடிப்பு பெரும் பாராட்டைப் பெற்றது. நாயகன், வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்கள் என பல்வேறு வகைகளில் நடித்த அவர் இதுவரை 25க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பங்கேற்றுள்ளார்.

திறமையான நடிப்பால் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்திருந்த திலீப் ராஜ், இன்று திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது மறைவு எதிர்பாராத ஒன்று என்பதால் திரையுலகில் சோக அலை பரவியுள்ளது. இளம் வயதில் ஏற்பட்ட இந்த திடீர் மரணம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சமூக வலைதளங்கள் முழுவதும் ரசிகர்கள் அவரது நினைவுகளை பகிர்ந்து வருவதுடன், பல்வேறு திரையுலக பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களும் அனுதாபங்களும் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

Advertisement

Advertisement