• Jan 09 2026

தொண்டி கடலில் விபத்துக்குள்ளாகிய "மண்டாடி" படக்குழு! நடந்தது என்ன? அதிர்ச்சியில் ரசிகர்கள்

subiththira / 3 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகராக இருந்து, தற்போது ஹீரோவாக மாறி சாதனை புரிந்து வரும் நடிகர் சூரி, தற்போது ‘மண்டாடி’ எனும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படம் அவரின் படைப்பு திறனை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் முயற்சியாகவே ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.


இந்நிலையில், இத்திரைப்படத்தின் ஒரு முக்கியமான காட்சி ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தொண்டி பகுதியில் உள்ள கடலில் நடைபெறுவதாக திட்டமிடப்பட்டது. இதற்கேற்ப, படக்குழுவினர் கடலில் ஒரு படகு மூலம் படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்தனர். ஆனால், எதிர்பாராத விதமாக படகு கவிழ்ந்து கடலில் விபத்துக்குள்ளாகியது என்ற செய்தி தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாகவே திட்டமிட்ட படி, "மண்டாடி" படத்தின் ஒரு முக்கிய காட்சி தொண்டி கடலில், இயற்கை சூழலை நன்கு காட்டும் வகையில் படமாக்கப்படவிருந்தது. இதில் நடிகர் சூரி மற்றும் சில தொழில்நுட்பக் கலைஞர்கள், படக்குழுவினர் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. 


படப்பிடிப்பு நடைபெற்று கொண்டிருந்த வேளையில், திடீரென படகின் சீரமைப்பில் ஏற்பட்ட பிழை காரணமாக அந்த படகு கவிழ்ந்தது. இதனாலேயே படகில் இருந்தவர்கள் கடலுக்குள் வீழ்ந்தனர். 

முக்கியமாக, அந்த விபத்து நேரத்தில் நடிகர் சூரி அந்த படகில் இல்லாததாலேயே, அவர் எந்தவித பாதிப்புக்கும் உள்ளாகவில்லை. அவர் அருகில் இருந்த ஒரு வேறுபடகில் இருந்ததாகவும், சம்பவத்தைப் பார்த்த உடனேயே பதற்றத்தில் ஆழ்ந்ததாகவும் கூறப்படுகிறது.

அத்துடன் இதன்போது பல லட்சம் ரூபா மதிப்புள்ள படப்பிடிப்பு சாதனங்கள் நீரில் மூழ்கியதாகவும்  தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Advertisement

Advertisement