• Oct 08 2025

பூமர் விஜயா செய்த காரியம்; கதறியழுத மீனா.. ரோகிணி கொடுத்த ஐடியா வேஸ்ட் ஆகுமோ

Aathira / 1 day ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில் ,  மனோஜ்  புதிய பிரான்ச் ஒன்றை ஓபன் பண்ணுவதாக  கூறுகின்றார். அதில் மகேஸ்வரியின் புருஷனை பார்ட்னராக  சேர்த்துள்ளதாக கூறுகின்றார் .

அந்த நேரத்தில்  ரோகிணி, நான் தான் அந்த ஐடியா கொடுத்து மகேஸ்வரி  புருஷனோடு கதைத்ததாக சொல்லுகின்றார் .  அதற்கு விஜயா, நீ ஒன்னும் இல்லாதவ தானே..  இது பண்ண தானே வேண்டும் என்று சொல்லுகின்றார் .

இதன் போது அங்கு வந்த மீனா  டென்ஷனாக இருப்பதை பார்த்து முத்து என்ன நடந்தது என்று கேட்கின்றார். அதற்கு தனது வண்டி காணாமல் போய்விட்டதாக சொல்லுகின்றார் .  அதன் பின்பு முத்து  அவரை சமாதானம் செய்கின்றார். 


இதை தொடர்ந்து  மீனாவின் அம்மாவின் பூக்கடையை  தூக்கியவரிடம் செல்வம் லஞ்சம் கொடுத்து  பேசுகின்றார். இதனை முத்து  உரிய அதிகாரியுடன் நின்று பார்க்கின்றார். அதன் பின்பு  அவரை கையும் களவுமாக பிடிக்கின்றனர் .

இதனால் உண்மையை நிரூபித்த முத்துவை அவர் பாராட்டுகின்றார். மேலும்  ஒரு லெட்டர் எழுதி  தாங்க  உடனடியாகவே பூக்கடையை அந்த இடத்திலேயே  வைக்க விடுவோம் என்று கூறுகின்றார். அதற்காக அவர்  அந்த அதிகாரியின் வீட்டுக்கு செல்கின்றார் .

இதன் போது அங்கே அருணும் வந்து  சீதாவின் அம்மா கடையை மீட்டெடுக்க  இன்ஸ்பெக்டருடன்  கதைத்து சிபாரிசு பண்ணி லெட்டர் கொடுக்கின்றார். ஆனால் அவர் தனக்கு சிபாரிசு பிடிக்காது என்று சொல்லுகின்றார் .

இதை எல்லாம் உள்ளே இருந்து பார்த்துக் கொண்டிருந்த முத்து, அவர் என்னுடைய மச்சான் தான்.. ஆனால் சின்ன மனஸ்தாபம்.. இந்தப் பூக்கடை  அவரின் முயற்சியால் வந்ததாகவே இருக்கட்டும் என்று சொல்லுகின்றார் .  அதன் பின்பு மீனா  அம்மாவுடன் கோயிலுக்குச்  செல்கின்றார்.  இதுதான் இன்றைய எபிசோட். 

Advertisement

Advertisement