• May 31 2025

S.J.சூர்யானா சும்மாவா...! மேடையில் பயப்படாமல் பாடல் பாடி அசத்துறீங்களே..!

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தனது தனிப் பாணியில் ரசிகர்களைக் கட்டிப்போட்ட S.J.சூர்யா நடிகர் மற்றும் இயக்குநராக மக்களின் மனங்களைக் கவர்ந்தது மட்டுமல்லாது சமீபத்தில் இசையமைப்பாளராகவும் களமிறங்கி உள்ளார். தனது பார்வையில் புதுப் பாணிகளைக் கொண்டுவரும் சூர்யா சமீபத்தில் நடைபெற்ற ஒரு கலாசார நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார்.

அந்நிகழ்ச்சியில் பாலா நடுவராகப் பங்கேற்றிருந்தார். நிகழ்ச்சி கலந்துரையாடலின் போது, அவர் S.J.சூர்யாவிடம், “அண்ணா, ‘பொதிகை மலை’ பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும்... நீங்க ஒருமுறை அதை பாடினீங்கனா மகிழ்ச்சி!” எனக் கூறியிருந்தார்.


இதற்கு எந்த தயக்கமும் இன்றி S.J.சூர்யா மகிழ்ச்சியோடு அந்தப் பாடலை பாடத் தொடங்கினார். S.J.சூர்யா தனது தனித்துவமான குரல் மற்றும் உணர்வுடன் 'பொதிகை மலை' பாடலை பாடிய போது, நிகழ்ச்சியில் இருந்த அனைவரும் மெளனமாக அதை அனுபவித்தார்கள்.

இந்தப் பாடலை மேடையில் தன்னம்பிக்கையுடன் பாடிய சூர்யா மீண்டும் இப்பாடலை உயிர்த்தெழச் செய்தார் என ரசிகர்கள் கூறுகின்றனர். அத்துடன் இப்பாடலைக் கேட்ட ரசிகர்கள் மகிழ்ச்சியில் கத்திக் கூச்சல் போட்டார்கள்.




Advertisement

Advertisement