தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சமந்தா. இவர் பல திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார். இந்த நிலையில் சமந்தா கூறிய கருத்து சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது .
தமிழ் ,தெலுங்கு ,மலையாளம் ,கன்னடம் ,ஹிந்தி என பல மொழிகளில் தனது நடிப்பின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகின்றார். தற்போது தயாரிப்பு நிறுவனம் ஒன்றினையும் ஆரம்பித்துள்ளார். இந்த தயாரிப்பு நிறுவனத்தில் "சுபம்" என்ற திரைப்படத்தினை தயாரித்து அதில் நடித்தும் உள்ளார் .மேலும் இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தயில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகின்றது .
மேலும் சமந்தா கூறிய விடயம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகின்றது. அதாவது "தற்போது ஒரு வட்டத்தில் சிக்கி கொள்ளாமல் இருப்பது சுகந்திரம் என்று புரிகின்றது. மேலும் கடந்த 2 வருடங்களாக எனது திரைப்படங்கள் எதுவும் வெளிவரவில்லை, முன்பு போல் வெற்றி ஏதும் எனக்கு இல்லையென அதிகளவானேர் நிலைக்கின்றார்கள். யார் என்ன நினைத்தாலும் பரவாயில்லை எனக் கூறியிருந்தார் .
மேலும் நான் முன்பு இருந்ததை விட மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் நான் செய்யும் வேலை நின்மதியை தரும் போது ஏன் மற்றவர்களுடைய கருத்துக்களுக்கு கவலைபட வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் இவர் கூறிய கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதுடன் ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
Listen News!