• Sep 29 2025

கரூர் சம்பவம் பேரிழப்பு அல்ல, பேரவலம்.! விஜய் டிவி சீரியல் நடிகை ஆவேச பதிவு

Aathira / 2 hours ago

Advertisement

Listen News!

கரூரில் விஜய் மேற்கொண்ட பரப்புரையின் போது  கூட்ட நெரிசலில் சிக்கி சுமார் 41 பேர்  உயிரிழந்துள்ளனர்.  தற்போது இதனை  விசாரணை செய்வதற்காக தனி குழு அமைக்கப்பட்டுள்ளது.  இந்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும்  உலுக்கியுள்ளது. 

விஜய் நடத்தும்  கூட்டத்திற்கு  பத்தாயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அதில் 27 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். இதனாலையே அதிக அளவில்  மக்கள் கூடி கூட்ட நெரிசல் ஏற்பட்டு பலர் சிக்கி உயிரிழந்து உள்ளனர். 


இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு விஜய் 20 லட்சம் ரூபாய்  இழப்பீடும்,  காயமடைந்தவர்களுக்கு 2 லட்சமும் வழங்கியுள்ளார். அரச தரப்பிலும் 10 லட்சம் கொடுக்கப்பட்டுள்ளது. ஒருசில அரசியல் தலைமைகளும் பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்களால் இயன்ற உதவியை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், கரூர் சம்பவம் பற்றி பாண்டியன் ஸ்டார்ஸ் 2 சீரியல் நடிகை சரண்யா தனது ஆதங்கத்தை தெரிவித்து உள்ளார். தற்போது அவருடைய பதிவு வைரலாகி வருகிறது. இதோ அவருடைய இன்ஸ்டா பதிவு...



Advertisement

Advertisement