தமிழ் திரையுலகில் தயாரிப்பாளராகவும் நடிகராகவும் தனித்த அடையாளத்தை உருவாக்கியவர் லெஜெண்ட் சரவணன். வணிக உலகில் இருந்து சினிமாவுக்குள் நுழைந்து, தனது முதல் படத்தின் மூலம் பெரும் கவனத்தை ஈர்த்த அவர், தற்போது தனது புதிய திரைப்படத்தின் பணிகளில் முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், பல மாதங்களாக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த முக்கிய அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.

லெஜெண்ட் சரவணன் நடிப்பில் உருவாகி வரும் இந்த புதிய திரைப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. படத்தின் படப்பிடிப்பு முடிந்து, எடிட்டிங், பின்னணி இசை, தொழில்நுட்ப வேலைகள் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், படத்தின் டைட்டில் என்ன என்பது குறித்து பல மாதங்களாக எந்தவித அறிவிப்பும் வெளியாகாமல் இருந்தது. இதனால், ரசிகர்கள் மத்தியில் பல்வேறு யூகங்களும், எதிர்பார்ப்புகளும் உருவாகி வந்தன.
இந்த சூழ்நிலையில், படக்குழு தற்போது அதிகாரபூர்வமாக படத்தின் டைட்டிலை அறிவித்து ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது. இந்த படத்திற்கு ‘லீடர்’ என்று பெயரிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டைட்டிலை இயக்குநர் விக்கிரமராஜா வெளியிட்டுள்ளார். டைட்டில் அறிவிப்பு வெளியான உடனே, அது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
Listen News!