• Nov 19 2025

எனக்கு கடவுள் நம்பிக்கை இல்ல... பார்த்தாலே கோபம் தான் வரும்.! ராஜமௌலி ஓபன்டாக்.!

subiththira / 1 day ago

Advertisement

Listen News!

தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்பட ரசிகர்கள் எதிர்பார்த்துள்ள புதிய திரைப்படம் "வாரணாசி" படத்தின் பெயர் வெளியீட்டு விழா சமீபத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர் ராஜமௌலி, கதாநாயகன் மகேஷ் பாபு, மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.


விழாவின் முக்கியமான தருணங்களில் ஒன்று, இயக்குநர் ராஜமௌலி தனிப்பட்ட நம்பிக்கைகள் குறித்து பேசிய கருத்துகள் விளங்குகின்றது.  ராஜமௌலி கூறியதாவது, “எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. அனுமான் தான் என்னை வழி நடத்துகிறார் என தந்தை கூறுவார். 

என் மனைவியும் அனுமான் பக்தை. அனுமனை அவரது நண்பர் போல நினைத்து அவருடன் பேசிக்கொண்டிருப்பார். அவர்களை நினைத்தால் எனக்கு கோபம் தான் வரும்." என்றார். 


இந்த பேச்சு ரசிகர்கள் மற்றும் மீடியா வட்டங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பலர் ராஜமௌலியின் நேர்மையான உணர்வுகளையும், தனிப்பட்ட நம்பிக்கைகளை வெளிப்படையாகப் பகிர்ந்ததையும் பாராட்டியுள்ளனர்.

Advertisement

Advertisement