ஸ்ரேயா கோஷல் இந்தியாவின் மிகச் சிறந்த மற்றும் பிரபலமான பாடகர்களில் ஒருவர். அவரது பரந்த குரல் வரம்பு மற்றும் பல்துறைத்திறன் ஆகியவற்றால் இசை துறையில் தனக்கு என்று தனி இடம் பிடித்தவர். அவர் பல்வேறு இந்திய மற்றும் வெளிநாட்டு மொழிகளில் திரைப்படங்கள் மற்றும் ஆல்பங்களுக்கான பாடல்களைப் பதிவு செய்துள்ளார்.
மேலும் இவர் ஐந்து தேசிய திரைப்பட விருதுகள் , நான்கு கேரள மாநில திரைப்பட விருதுகள் , இரண்டு தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகள் , இரண்டு BFJA விருதுகள் , ஏழு பிலிம்பேர் உட்பட பல பாராட்டுக்களைப் பெற்றுள்ளார். விருதுகள் மற்றும் பத்து பிலிம்பேர் விருதுகளை தன்வசமாக்கி உள்ளார்.
இசைத்துறையில் மிகவும் பிசியாக இருந்தாலும் சோங் ரெக்கோடிங் இல்லாத சந்தர்ப்பத்தில் தனது குடும்பத்தாரோடும் குழந்தைவுடனும் இருக்கும் மகிழ்ச்சியான தருணங்களை புகைப்படம் எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவிடுவது வழக்கம் .
அதேபோல இன்று கடற்கரையில் மாஸாக சன்கிளாஸ் அணிந்துகொண்டு தனது மகன் திவ்யனுடன் இருக்கும் புகை படத்தை பேஸ்புக்கில் பதிவிட்டு "புயலுக்கு முன் அமைதி " என்ற வாசகத்தையும் எழுதி உள்ளார்
Listen News!