• Oct 17 2024

பிரான்ஸ் சென்ற மனோஜால் ரோகிணிக்கு வைக்கப்பட்ட செக்? சீதாவை தேடிவந்த அதிஷ்டம்

Aathira / 2 hours ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில்,  ரோஹினி கொடுத்த மயக்க மாத்திரையில் முத்து, மீனா இருவரும் நன்றாக தூங்கி விடுகின்றார்கள். இதனால் நள்ளிரவில் ரோகிணி முத்துவின் போனை  எடுப்பதற்காக வருகின்றார். அந்த நேரத்தில் விஜயா ரோகினியை வந்து பிடிக்க, தனக்கு தூக்கம் வரவில்லை டீ போட வந்ததாக சொல்கின்றார் ரோகிணி. 

விஜயாவும் மீனா சிரித்ததை நினைத்து தனக்கு தூக்கம் வரவில்லை என்று பேச, ரோகிணி தான் தூங்க போவதாக சொல்லி செல்கின்றார். சிறிது நேரம் கழித்து மீண்டும் போனை வந்து எடுக்கப் போக, அந்த நேரத்தில் மனோஜ் பின்னால் இருந்து ரோகினி தூக்குகின்றார்.

மேலும் தான் கனவில் பிரான்ஸ், இத்தாலியில் இருப்பது போல் கனவு கண்டதாகவும் தனக்கு தூக்கமே வரவில்லை அதனால் ரொமான்ஸ் பண்ணுவோம் என்று அவரை ரூமுக்கு அழைத்துச் செல்கின்றார். மறுநாள் மனோஜ் கடைக்கு அவரின் பாடியாட்களின் குடும்பத்தினர் வந்து ஹாஸ்பிடல் செலவுக்கு 50,000 தருமாறு சண்டை போடுகின்றார்கள்.


தன்னிடம் காசு இல்லை என்று மனோஜ் சொன்னதும் கடையில் இருந்த பொருட்களை அள்ளிச் செல்கின்றார்கள். இதனால் எதுவும் செய்ய முடியாமல் மனோஜ் நிற்கின்றார். இன்னொரு பக்கம் டான்ஸ் கிளாஸ் நடக்கும்போதும் விஜயாவுக்கு மீனா சிரித்தது ஞாபகம் வருகின்றது. இதனால் பார்வதியிடம் சொல்லி மீனாவுக்கு போன் பண்ணி  ஏன் சிரித்தாய் என்று கேட்கின்றார் ஆனால் அவர் சொல்லவில்லை.

இறுதியாக சீதாவுக்கு அவருடைய அம்மா பூவைத்து காலேஜ் அனுப்பும்போது அங்கு வந்த ஒரு பெண்மணி, தான் சீதாவை தினமும் பார்ப்பதாகவும் மிகவும் நல்ல பெண்ணாக இருக்கின்றார். அவர் எனது குடும்பத்துக்கு வந்தால் தாங்கள் மிகவும் சந்தோஷப்படுவோம் என்று சீதாவை பொண்ணு கேட்கிறார். இதனால் மீனாவின் அம்மா சந்தோஷப்படுவதோடு தான் மகளிடமும் மருமகனிடம் கதைத்து விட்டு சொல்வதாக சொல்கின்றார் இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement