• Oct 18 2024

"என்னை மன்னிச்சிடுங்க நான் பணத்திற்காகத்தான் இப்படி செய்தேன்"; மன்னிப்புக் கேட்ட நடிகர் லால்

Prema / 2 years ago

Advertisement

Listen News!

இந்தியத் திரையுலகில் பிரபல நடிகராகவும், இயக்குநராகவும் வலம் வந்தவர் நடிகர் லால். இவர் மலையாள சினிமாவிலே அதிகளவு பிரபல்யமானவராக இருந்தாலும் தமிழிலும் 'எங்கள் அண்ணா', 'குட்டிப்புலி', 'சீமராஜா', 'டாணாக்காரன்', 'சண்டைக்கோழி' உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கின்றார். அதிலும் இவர் 'டாணாக்காரன்' என்ற படத்தில் ஈஸ்வர மூர்த்தியாக நடித்து மிரட்டியமை யாராலும் இன்றுவரைக்கும் மறக்க முடியாது.

இவ்வாறாக பல படங்களில் நடித்து வந்த லால் தற்போது இயக்குநர் மணிரத்னத்தின் பிரமாண்ட படைப்பான 'பொன்னியின் செல்வன்' படத்திலும் திருக்கோவிலூர் மலையமான் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்.

இந்த நிலையில் நடிகர் லால் தற்போது அறிவிப்பொன்றினை வெளியிட்டிருக்கின்றார். அதாவது இனிமேல் தான் ஆன்லைன் ரம்மி விளம்பரங்களில் நடிப்பதை நிறுத்துவதாக கூறியிருக்கின்றார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில் "கொரோனா ஊரடங்கின் போது ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் காரணமாகவே ஆன்லைன் ரம்மி விளம்பரங்களில் நடித்துள்ளேன். இந்த ஆன்லைன் ரம்மி விளையாட்டால் கடுமையான பிரச்சினைகள், தற்கொலைகள் நடக்கும் என்று அப்போது எனக்குத் தெரியாது என்னை மன்னித்து விடுங்கள்." எனக் கூறியிருக்கின்றார்.

மேலும் இது தொடர்பாக அவர் கூறுகையில் "அரசின் அனுமதியுடன் தான் இந்த விளம்பரத்தில் நடிக்க என்னை அழைப்பதாக நினைத்தேன், இது இவ்வாறான பின் விளைவுகளை ஏற்படுத்தும் என்று எனக்குத் தெரியாது" எனவும் கூறியிருக்கின்றார்.

இந்த விளையாட்டால் தற்கொலைகள் தொடர்ந்த நிலையில் மீண்டும் ரம்மி தடை சட்டத்தை கொண்டு வர கேரள அரசு பரிசீலித்து வருவதாகவும் கூறப்படுகின்றது. இந்த நிலையில் நடிகர் லால் தானாகவே முன் வந்து இவ்வாறு தெரிவித்திருப்பதற்கு பலரும் பாராட்டுத் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமன்றி இவரை போன்று மற்றப் பிரபலங்களும் தப்பை உணர்ந்து முன்வந்து மன்னிப்புக் கேட்க வேண்டும் எனவும் கூறி வருகின்றனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement