• May 03 2024

திருமணத்திற்குப் பிறகு தனது கணவருடன் ரொமாண்டிக்கான போட்டோ வெளியிட்ட சீரியல் நடிகை நட்சத்திரா

stella / 1 year ago

Advertisement

Listen News!

ஷு தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி முடிவடைந்த சூப்பர் ஹிட் சீரியல் தான் யாரடி நீ மோகினி. இந்த சீரியலில் வெண்ணிலா என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்து பிரபல்யமானவர் தான் நட்சத்திரா. இந்த சீரியல் மூலம் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் உள்ளது.

இதனைத் தொடர்ந்து தற்பொழுது கலர்ஸ்டிவியில் வள்ளி திரமணம் என்னும் சீரியலில் லீட் ரோலில் நடித்து வருகின்றார்.வள்ளி - கார்த்திக் ஜோடிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் உள்ளனர். இந்நிலையில் நட்சத்திராவுக்கு சில மாதங்களுக்கு முன்பு சிம்பிளாக நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.

மேலும் இவர் சில நாட்களுக்கு முன்பு தனது காதலான விஸ்வாவை மலையாள முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகின. நட்சத்திராவின் தாத்தா உடல் நலம் சரியில்லாமல் ஆஸ்பிட்டலில் இருப்பதால் இந்த கல்யாணம் அவசர அவசரமாக முடிக்கப்பட்டது என்ற தகவலும் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் திருமணத்திற்கு பிறகு தனது கணவருடன் இருக்கும் புகைப்படத்தை பயங்கர லவ்வுடன் நட்சத்திரா தனது சோஷியல் மீடியாவில் ஷேர் செய்துள்ளார். இருவரும் ஒரே நிறத்தில் ஆடை அணிந்து இருக்கின்றனர். இந்தப் பகைப்படம் ரசிகர்களிடையே வைரலாகி வருவதைக் காணலாம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement