• May 20 2024

நடிகர் தனுஷின் தாய்க்கிழவி பாடலின் மீது எழுந்துள்ள புகார்-காரணம் என்ன தெரியுமா..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகர்களில் ஒருவராகத் திகழ்ந்து கொண்டிருப்பது மட்டுமல்லாமல் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தையும் கொண்டு இருப்பவர் நடிகர் தனுஷ். இவரின் திரையுலக அறிமுக காலத்திலிருந்து இன்றுவரை இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்று இருக்கின்றன.

இந்த நிலையில் நடிகர் தனுஷ் தற்போது இயக்குநர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் 'திருச்சிற்றம்பலம்' என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த படம் ஆகஸ்ட் 18-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனுஷ்- இசையமைப்பாளர் அனிருத் மீண்டும் இப்படத்தினூடாக இணைந்துள்ளனர். மேலும் இப்படத்தில் நடிகர் தனுஷூடன் இணைந்து நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், பாரதி ராஜா, பிரகாஷ் ராஜ் மற்றும் ராஷி கண்ணா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இந்த படத்தில் நடிகர் தனுஷ் எழுதி பாடியிருந்த முதல் சிங்கிளான தாய்க்கிழவி பாடல் சமீபத்தில் வெளியாகியிருந்தது. அது மட்டுமல்லாது இந்த பாடல் யூடியூப்பில் 4 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களைக் கடந்து இருக்கின்றது. இப்பாடலினுடைய வரிகள் வேடிக்கையாக இருந்தாலும் இப்பாடல் மீதும் ஓர் புகார் எழுந்திருக்கின்றது.

அதாவது இது தொடர்பாக சமூக ஆர்வலர் ஒருவர் குறிப்பிடும் போது, பாடலின் சில வரிகள் பெரியவர்களை அவ மரியாதை செய்யும் வகையில் உள்ளதாக புகார் அளித்திருக்கின்றார். அதுமட்டுமில்லாமல் பாடலின் சில வரிகளை மாற்ற வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார். இந்நிலையில் இப்பாடல் மீது எழுந்திருக்கின்ற இந்தப் புகார் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement