• Apr 27 2024

அண்ணா என்று கூப்பிடாதே.. பிரபல பெண் நடிகையிடம் கெஞ்சிய சூர்யா…!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தனது அசுர நடிப்பினால் ரசிகர்களிடத்தே தனக்கான ஒரு இடத்தை பிடித்தவர் நடிகர் சூர்யா.

இயக்குநர் பாலா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த 2001-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “நந்தா”. மேலும் இந்த திரைப்படத்தில் லைலா, ராஜ்கிரண், கருணாஸ், என பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் இசையமைத்திருந்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும் இப்படத்தில் சூரியவிற்கு அம்மாவாக நடிகை ராஜஸ்ரீ நடித்திருப்பார். இவர் அதற்கு முன்னர் கடந்த 1994-ஆம் ஆண்டு பாரதி ராஜா இயக்கத்தில் “கருத்தம்மா” என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து இருந்தார். இவர் நந்தா படத்தில் சூர்யாவுக்கு அம்மாவாக நடித்திருந்தாலும். உண்மையில் சூர்யாவை விட 5 வயது சிறியவராம் நடிகை ராஜஸ்ரீ.

இந்த நிலையில், இவர் சமீபத்திய ஒரு நேர்காணலில் சூர்யா மற்றும் இயக்குநுர் பாலா குறித்து கூறியுள்ளார்.

மேலும் இது தொடர்பாக அவர் கூறியதாவது …“ சூர்யா என்னைவிட 5 வயது சிறியவன். என்னுடைய பெஸ்ட் பிரென்ட். நந்தா படப்பிடிப்பில் அவரை அண்ணா என்று கூப்பிடுவேன். அத்தோடு கால் செய்து பேசினால் கூட சூர்யா அண்ணா என்று தான் சொல்வேன். அதற்கு சூர்யா ஐயோ ப்ளீஸ் என்னை அண்ணா என்று மட்டும் கூப்டாத என சொல்லுவாராம்.

அத்தோடு நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு பாலா -சூர்யா இணைந்துள்ளார்கள் .அந்த படத்தில் நான் நடிக்க வாய்ப்பு இருக்கு. பாலாவுக்கு கால் செய்து நான் உங்கள் படத்தில் நடிக்கலாமா? என்று கேட்டேன். நீ திரும்ப நடிக்க தொடங்கிவிட்டாயா..? அப்பிறம் சரி சொல்லுறேன் என பாலா கூறிவிட்டாராம். இதனை வைத்து பார்க்கையில் சூர்யாவின் 41-வது படத்தில் ராஜஸ்ரீ முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லையாம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement