• Jul 27 2024

காத்து வாங்க போனேன் கவிதை வாங்கி வந்தேன்.. பீச்சில் விக்னேஷ் சிவனுடன் நயன்தாரா..

Sivalingam / 2 months ago

Advertisement

Listen News!

நடிகை நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் கைகோர்த்து பீச்சில் காத்து வாங்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா 10 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள் என்பதும் வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பெற்றுக் கொண்ட இந்த தம்பதிகள் அவ்வப்போது தங்கள் குழந்தைகளின் புகைப்படங்கள் வீடியோக்களை பதிவு செய்து வருவார்கள் என்பதும் தெரிந்தது.

அந்த வகையில் நயன்தாரா சற்று முன் தனது காதல் கணவர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து கைகோர்த்துக் கொண்டு ரொமான்ஸ் மூடில் இருக்கும் புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படங்களுக்கு ஏராளமான லைக்ஸ் குவிந்து வருகிறது.

குறிப்பாக அவர் பீச்சில் விக்னேஷ் சிவனுடன் கைகோர்த்து நடந்து சென்று காத்து வாங்குவது, சாலையில் கட்டி பிடித்துக் கொண்டு நடந்து செல்வது, கோவில் தூண்களுக்கு இடையில் இருக்கும் புகைப்படங்கள் ஆகியவை ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்த புகைப்படங்கள் வெளியாகி ஒரு சில மணி நேரங்களே ஆகியுள்ள நிலையில் 2 லட்சத்துக்கும் அதிகமான லைக்ஸ், நூற்றுக்கணக்கான கமெண்ட் பதிவாகி உள்ளது.

இந்த நிலையில் நடிகை நயன்தாரா, மாதவன் நடித்து வரும் ’தி டெஸ்ட்’ என்ற படத்தில், யோகி பாபு உடன் ’மண்ணாங்கட்டி சின்ஸ் 1960’ என்ற படத்திலும் நடித்து முடித்துள்ளார். மேலும் தற்போது அவர் மலையாளத்தில் ’டியர் ஸ்டூடண்ட்’ என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement