தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான நட்சத்திர ஜோடிகளாக திகழ்ந்து வருபவர்கள் அஜித்-ஷாலினி தம்பதியினர். அதாவது ரீல் ஜோடிகளாக இருந்து ரியல் ஜோடியாக மாறிய அஜித் - ஷாலினி இருவரும் 'அமர்க்களம்' திரைப்படத்தில் இருந்து காதலித்து வந்தனர்.
பின்னர் இவர்கள் இருவரும் 2000-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்வில் இணைந்து கொண்டனர். இவர்களுக்கு தற்போது ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.
இந்நிலையில் அஜித் தொடர்பான சுவாரசியமான சம்பவம் ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. அதாவது ஷாலினிக்கு காதலை வெளிப்படுத்தும் முன்பே அஜித் மனைவி அங்கீகாரம் கொடுத்த சம்பவத்தை பிரபல டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஸ்ரீஜா ரவி சமீபத்திய பேட்டியில் கூறியிருந்தார்.
இவர் தமிழின் முக்கிய நடிகைகளான தேவயானி, ரம்பா, ஷாலினி, சுவலட்சுமி உள்ளிட்ட பல நடிகைகளுக்கு டப்பிங் கலைஞராக திகழ்ந்து வந்தார். அப்போது அமர்க்களம் படத்தில் அவரை அஜித் சந்தித்திருந்தாராம். அப்போது "எனது மனைவி ஷாலினிக்கு நீங்கள் நன்றாக டப்பிங் கொடுக்கிறீர்கள்" என்று அஜித் கூறியது இன்று வரை பூரிப்பாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார் ஸ்ரீஜா.
இதற்கான காரணத்தை அவர் கூறுகையில் "மணம் முடிப்பதற்கு முன் ஒருவர் காதலி என்று தான் கூப்பிட்டு கேள்விப்பட்டிருக்கிறேன், அஜித் மனைவி என்று கூறியது என்னைப் பிரம்மிப்படைய வைத்துள்ளது " என ஸ்ரீஜா ரவி சுட்டிக் காட்டியுள்ளார்.
Listen News!