• Apr 16 2024

அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்ட அண்ணி... கண்டுக்காத அண்ணன்... ஆறுதல் தெரிவித்த தம்பி..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவரின் நடிப்பில் தற்போது 'சாகுந்தலம்', 'குஷி' மற்றும் 'யசோதா' படங்கள் உருவாகி வருகின்றன. இதில் 'யசோதா' படமானது தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் வருகிற நவம்பர் மாதம் 11ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் ட்ரைலர் ஆனது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 


இந்நிலையில் சமந்தா தற்போது ஒரு அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்டு இருக்கின்றார். அதாவது தனது சமூக வலைதளப் பக்கத்தில், கையில் ட்ரிப்ஸ் ஏறிக்கொண்டிருக்கும் நிலையில் படத்திற்கு டப்பிங் பேசுவது போல் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். மேலும் அந்தப் பதிவில் "சில மாதங்களுக்கு முன்பு எனக்கு மயோசிடிஸ் எனப்படும் ஆட்டோ இம்யூன் என்ற நோய் இருப்பது கண்டறியப்பட்டது" எனக் கூறியிருந்தார்


இதனைத் தொடர்ந்து இவருக்கு திரைப்பிரபலங்கள் உட்படப் பலரும் தங்களது ஆறுதலைத் தெரிவித்திருந்தனர். அதுமட்டுமல்லாது அவரின் முன்னாள் கணவர் நாக சைதன்யா ஆறுதல் தெரிவித்தாரா என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. சமந்தாவும் அவரது கணவர் நாக சைதன்யாவும் கடந்த ஆண்டு விவாகரத்துப் பெற்று பிரிந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில் அவரின் கணவர் ஆறுதல் தெரிவிக்கவில்லை எனினும், நாக சைதன்யாவின் தம்பியான அகில் அக்கினேனி அவரின் பதிவிற்கு ஆறுதல் கூறி கருத்தினை வெளியிட்டுள்ளார். அதாவது ஆல் தி லவ் அண்ட் ஸ்ரெந்த் டு யு டியர் சாம்" என்று தெரிவித்துள்ளார். இவரின் இந்தப் பதிவானது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement

Advertisement