• Jul 27 2024

ஒரு ஆண்டுக்கும் மேல் காத்திருந்த ‘அயோத்தி’ இயக்குனருக்கு கிடைத்த ஜாக்பாட்.. அடுத்த பட அப்டேட்..!

Sivalingam / 2 months ago

Advertisement

Listen News!

சசிகுமார் நடித்த ‘அயோத்தி’ என்ற திரைப்படத்தை இயக்குனர் மந்திரமூர்த்தி இயக்கிய நிலையில் அந்த படம் வெளியாகி நல்ல ரிசல்ட்டை பெற்றது என்பதும், நல்ல வசூலை செய்தது என்பது தெரிந்தது. ஆனால் ஒரு வெற்றி படத்தை கொடுத்த இயக்குனருக்கு ஒரு ஆண்டு ஆகியும் வேறு திரைப்பட வாய்ப்புகள் வராத நிலையில் தற்போது மீண்டும் ஒரு ஜாக்பாட் அடித்துள்ளதாக கூறப்படுகிறது.

இயக்குனர் ‘அயோத்தி’ மந்திர மூர்த்தி அடுத்த படத்திற்காக சில பிரபல நடிகர்களிடம் கதை சொன்னதாகவும் ஆனால் அந்த கதை அவர்களுக்கு பிடிக்கவில்லை என்றும் கூறப்பட்டது. ஒரு சில நடிகர்களுக்கு கதை பிடித்திருந்தாலும் தயாரிப்பாளர் அமையவில்லை என்றும் செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் தற்போது மீண்டும் அவர் சசிகுமார் உடன் இணைந்து ஒரு திரைப்படத்தை உருவாக்க இருப்பதாகவும் ‘அயோத்தி’ படத்தின் கதையிலிருந்து முற்றிலும் வேறுபட்ட கதை என்பதால் உடனே சசிகுமார் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் தெரிகிறது.



அதுமட்டுமின்றி பிரபல தயாரிப்பு நிறுவனம் கோபுரம் பிலிம்ஸ் இந்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி விட்டதாகவும் தெரிகிறது. இதனை அடுத்து இயக்குனர் மந்திர மூர்த்தி இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களை தேர்வு செய்து வருவதாகவும் இன்னும் ஒரு சில நாட்களில் இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.

‘அயோத்தி’ திரைப்படம் சர்ச்சைகளை ஏற்படுத்தினாலும் பெரும்பாலான ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற படம் என்பதால் ‘அயோத்தி’ போலவே மீண்டும் ஒரு வெற்றி படத்தை மந்திரமூர்த்தி - சசிகுமார் கூட்டணி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement