• Oct 18 2024

மஹாலட்சுமி வந்த நேரம்: ரவீந்தருக்கு முதல் முறையாக நடந்த அந்த சம்பவம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

ரவீந்தர் சந்திரசேகரன் இன்ஸ்டாகிராமில் தெரிவித்திருப்பதை பார்த்தவர்கள், இதெல்லாம் மனைவி மகாலட்சுமி வந்த நேரம் என்று கூறுகிறார்கள்.

 தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரனும், சீரியல்  நடிகையான மஹாலட்சுமியும் இரண்டு ஆண்டுகளாக காதலித்து செப்டம்பர் 1ம் தேதி திருமணம் செய்து கொண்டார்கள்.

அத்தோடு திருமணம் முடிந்ததில் இருந்தே அவ்வப்போது தன் மனைவியுன் புகைப்படங்கள், வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார் ரவீந்தர்.

இவ்வாறுஇருக்கையில் தன்னுடைய புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரவீந்தர்  தெரிவித்ததாவது,

கலைமாமணி ஞான சம்பந்தம் சாருடன் என் முதல் பட்டிமன்றம். என் அணி வென்றது. என் பேச்சுக்கு நிறைய பாராட்டு கிடைத்தது. என் அம்மாவின் ஆசி மற்றும் பொண்டாட்டியின் வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

எல்லாம் மஹாலட்சுமி வந்த நேரம் சார். வாழ்த்துக்கள். நீங்கள் எப்பொழுதும் சந்தோஷமாக இருக்க வேண்டும். அந்த பட்டிமன்றம் எப்பொழுது ஒளிபரப்பாகும். பார்க்க ஆவலாக இருக்கிறோம் என குறிப்பிட்டுள்ளனர்.

முன்னதாக மஹாலட்சுமியுடன் சேர்ந்து வந்தாள் மஹாலட்சுமியே நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் ரவீந்தர். இவ் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஒரு டப்பா அல்வாவை ரவீந்தரின் கையில் கொடுத்தார்கள்.மேலும் அதை பார்த்த ரவீந்தரோ, நான் சுவைத்த இனிப்புகளில் மகாலட்சுமியை விட கம்மி தான் இந்த அல்வா என்று ஒரே போடாக போட்டுவிட்டார்.

அய்யோ அந்த ரவீந்தர்லாம் மனைவியை எப்படி பாராட்டுகிறார் பாரு, நீயும் தான் இருக்கியே என சில வீடுகளில் புகைச்சலாம் என கூறிவருகின்றார்.





Advertisement