• Oct 18 2024

நான் என்னத்த சொல்ல.. எப்படி கூப்பிடுவாங்க... புலம்பும் சீரியல் நடிகர்!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தன்னை எப்படி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு கூப்பீடுவார்கள்  என புலம்பியுள்ளார் பிரபல சீரியல் நடிகர்.

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி வரும் 9 ஆம் தேதி கோலாகலமாக  ஆரம்பமாகவுள்ளது.கடந்த 5 சீசன்களை போல இந்த சீசனையும் நடிகர் கமல்ஹாசன்தான் தொகுத்து வழங்கவுள்ளார். இதற்கான இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.இதனிடையே பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் குறித்த தகவலும் வெளியாகி வருகிறது.

அதன்படி மைனா நந்தினி, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரர் மணிகண்டன், ஜிபி முத்து என பலரது பெயர்கள் அடிபட்டு வருகின்றன.சில பிரபலங்கள் தங்களின் பெயர் அடிபடுவதற்கு மறுப்பும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சீரியல் நடிகர் ஒருவர் நம்மளையெல்லாம் எப்படி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அழைப்பார்கள்? என புலம்பி தவித்துள்ளார்.



அதாவது கனா காணும் காலங்கள் சீரியலில் புலி கதாப்பாத்திரத்தில் சிறு பையனாக நடித்தவர் ராகவேந்திரன். எனினும் இதன்மூலம் பிரபலமான ராகவேந்திரன் காற்றுக்கென்ன வேலி என்ற சீரியலில் நடித்தார். அத்தோடு  கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த சீரியலில் இருந்து விலகிய ராகவேந்திரன், சீரியல் குழு மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.



இவ்வாறுஇருக்கையில்  பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து தனது இன்ஸ்டாகிராம் புலம்பியுள்ளார் ராகவேந்திரன். அவர் பதிவிட்டிருப்பதாவது, Big bossக்கு ஏன் போக மாட்டீர்கள் என என் அன்பு ரசிகர்கள், நண்பர்கள் நிறைய பேர் கேக்கராங்க. நான் என்னத்த சொல்ல. என்ன யாரும் கூப்பிடவும் மாட்டாங்க... நம்ம தான் celebrity லிஸ்ட்லயும் இல்ல. சர்ச்சைலேயும் இல்ல. கன்டென்ட் கொடுக்கிற திறமையும் இல்ல. நம்மள எப்படி கூப்பிடுவாங்க ?? என பதிவிட்டுள்ளார்.



ராகவேந்திரனின் இந்த பதிவை பார்த்த பலரும் அதற்கு பதில் கூறிய நிலையில் ஒரு ரசிகர்கர் அவருக்கு ரிப்ளே கொடுத்துள்ளார். அதில் அவர் தெரிவித்ததாவது, கிடைச்ச வாய்ப்புகரள உதாசீனம் செய்தால் இப்படி தான்புலம்பணும்.. விஜய் டிவில இருந்துகிட்டு விஜய் டீவிக்கே தேவையில்லாம கதைச்சா இப்படி தான் நடக்கும். உங்களுக்குனு ஒரு பெயர உருவாக்க இனி கொஞ்சம் கஷ்டப்படுங்க.. பெரிய பெரிய சாதனையாளர்கள் படைப்பாளிகளையே மறக்குற உலகம் இது. உங்களவா நினைவுல வச்சிட்டிருக்க போகுது? இதை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு முன்னே செல்லுங்கள் என தெரிவித்து வருகின்றனர்.





Advertisement