பிக்பாஸ் வீட்டிற்குள் இந்த வாரம் கெஸ்டாக வீட்டை விட்டு வெளியேறிய போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.அந்த வகையில் அசல் கோளாறு, GP முத்து, மெட்டி ஒலி சாந்தி, ராபர்ட் மாஸ்டர் ஆகியோர் ரீ எண்ட்ரி கொடுத்துள்ளனர். உள்ளே வந்த உடனேயே அசல் - ADK இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், பின்னர் ஷிவின் விக்ரமனிடம் பேசிய விதம் பற்றியும் அசல் விமர்சித்திருந்தார்.
அசல் தன்னிடம் பேச பிடிக்கவில்லை என சொல்லியதை கேட்டு கண்கலங்கிய ADK வை சக போட்டியாளர்கள் சமாதானம் செய்தனர்.இதனை அடுத்து இன்றைய தினம் மணிகண்டன் மற்றும் தனலக்ஷ்மி ஆகியோர் என்ட்ரி கொடுத்துள்ளனர்.
இதனால் அடுத்த அடுத்த வாரங்களில் யாரெல்லாம் வரப்போகின்றார்கள் என்பதனைக் காண ரசிகர்கள் மிகவும் ஆவலாக உள்ளனர் என்பதும் முக்கியமாகும்.
மேலும் நேற்றைய தினம் ஏடிகே வீட்டின் பிக்பாஸாக இருந்தார்.இவரைத் தொடர்ந்து இன்றைய தினம் பிக்பாஸாக இருந்து ஹவுஸ்மேட்ஸிடம் ஒரு கேள்வி கேட்டுள்ளார். அதாவது மற்றவர்களிடம் நீங்க கண்ட நல்ல குணம் ஒன்று சொல்லுங்க என்று கேட்டார். அதற்கு விக்ரமன் அசீம் மிகவும் அன்பானவர் 14 வாரமாக துணிச்சலுடன் விளையாடி வருகின்றார் என்றார்.
அதே போல அசீம் விக்ரமன் கோபம் மற்றவர்களை பாதித்திடக் கூடாது என்பதற்கான உதாரணமாக இருந்து வருகின்றார் என்று கூறினார். இது குறித்த ப்ரோமோ வெளியாகியுள்ளதைக் காணலாம்.
Listen News!