தமிழ் சினிமாவில் தனது தனித்துவமான கதையமைப்புகளால் அறியப்படும் இயக்குநர் விக்னேஸ்சிவன், தற்போது திரைப்படத்துறையை விட தனது குடும்பத்துடன் கழிக்கும் அழகான தருணத்தின் மூலம் ரசிகர்களின் மனங்களைக் கவர்ந்துள்ளார்.
சமீபத்தில், விக்னேஸ்சிவன் தனது குழந்தைகளுடன் பந்து விளையாடும் போது எடுத்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
புகைப்படங்களில், விக்னேஸ்சிவன் தனது இரு குழந்தைகளுடன் ஓர் அமைதியான வெளியில், பந்து பிடித்து மகிழ்ச்சியாக விளையாடுகின்றார். இந்த புகைப்படங்களுடன், இயக்குநர் தனது இன்ஸ்டாப் பக்கத்தில், "நிபந்தனையற்ற அன்பின் அமைதியான பதிப்பு..!" என்ற வரிகளையும் இணைத்துள்ளார்.
Listen News!