• Nov 21 2025

"ஆரோமலே" படத்திற்கு வந்த சட்டச் சிக்கல்... உயர்நீதிமன்றம் எடுத்த அதிரடி நடவடிக்கை.!

subiththira / 1 day ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் புதிய இயக்குநர்கள், புதிய படைப்புகள் வெளிவரும் தருணம், ரசிகர்களுக்கு புதுமையான அனுபவத்தை ஏற்படுத்துகிறது. அதே நேரத்தில், பட உரிமைகள், காப்புரிமை மற்றும் சட்ட விதிகள் குறித்து கவனம் செலுத்த வேண்டிய நிலையும் உருவாகிறது. 


சமீபத்தில், சாரங் தியாகு இயக்கத்தில் கடந்த 7ம் தேதி வெளிவந்த படம் ‘ஆரோமலே’ படத்தின் கதைகளுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. 

அதாவது, ‘ஆரோமலே’ படத்தின் மூலம் சாரங் தியாகு தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். கெளதம் மேனனிடம் துணை இயக்குநராக பணியாற்றி, திரைப்படத் துறையில் அனுபவம் பெற்ற இவர், ‘ஆரோமலே’ என்ற தனது முதலாவது படத்தை வெளியிட்டுள்ளார். 

இப்படத்தை மினி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இசையமைப்பாளர் சித்து குமார் கதையின் உணர்வுகளை வலுப்படுத்தும் இசையையும் பின்னணி பாடல்களையும் உருவாக்கியுள்ளார்.


இதில், கிஷன் தாஸ், ஷிவாத்மிகா, ஹர்ஷத் கான் மற்றும் விடிவி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படம், கதைக்களம் மற்றும் பாடல்கள் மூலம், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. 

அத்துடன், தற்பொழுது இப்படத்திற்கு சட்டப் பிரச்சினை ஒன்று ஏற்பட்டுள்ளது. இப்படத்தில் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ பாடலை பயன்படுத்தியதாக ஆர்.எஸ்.இன்போடெய்ன்மெண்ட் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் பதிவு செய்யப்பட்டது.

வழக்கில் நிறுவனம், படத்திலிருந்து பாடல் உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டுக் கூறியுள்ளது. பாடல் இசை மற்றும் காட்சிகளை அனுமதி பெறாமல் பயன்படுத்தியதாக புகார் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், `விண்ணைத் தாண்டி வருவாயா' படத்தின் காட்சிகள் மற்றும் பின்னணி இசையை பயன்படுத்த இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், டிசம்பர் 17க்குள் பதிலளிக்க வேண்டும் என "ஆரோமலே" பட தயாரிப்பு நிறுவனத்துக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement