விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தை டாக்டர் பட இயக்குநர் நெல்சன் திலீப் குமார் உருவாக்கி இருந்தார். தெலுங்கு நாயகி பூஜா ஹெக்டே முக்கிய ரோலில் நடித்திருந்த இந்த படத்தில் விஜய் ராணுவ வீரராக வந்து ரசிகர்களை கவர்ந்த போதிலும் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றிருந்தது.
இதை தொடர்ந்து தற்போது ரஜினியின் ஜெயிலர் படத்தில் இணைந்துள்ளார் நெல்சன் திலீப் குமார்.இந்த படத்தையும் சன் பிக்சர்ஸ் தான் தயாரிக்கிறது. இப்படத்தில் அனிரூத் இசையமைக்கின்றார். மேலும் படத்தின் பெஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியாகியிருந்ததோடு படத்தில் நடிப்பவர் குறித்தும் தகவல் வெளியாகியிருந்தது.
அதன்படி ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார், வசந்த் ரவி, யோகி பாபு, ரம்யா கிருஷ்ணன், மலையாள நடிகர் விநாயகம் உள்ளிட்டோர் இடம்பெறுவது முன்னதாகவே உறுதியாகிவிட்டது.
இந்த நிலையில் இப்படம் எப்போது வெளியாகும் என்பது குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ஜெயிலர் திரைப்பம் அடுத்த ஆண்டு மே மாதத்தின் முதல் வாரத்தில் வெளியாகும் என்று கூறப்படுகின்றது.
அதாவது பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் 2ம் பாகம் தமிழ் புத்தாண்டு சமயத்தில் வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில் ஜெயிலர் வெளியீடு ஏப்ரல் மாதம் வெளியாக வாய்ப்பு குறைவு என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!