ஸ்ரீலீலா குறித்து சமீபகாலமாக சமூக வலைத்தளங்களில் பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன. குறிப்பாக, “தனக்கு இணையாக ஆட யாரும் இல்லை” என்று அவர் பெருமிதமாக பேசியதாக வெளியான தகவல் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் ஸ்ரீலீலாவின் அணுகுமுறை குறித்தும் பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து ஸ்ரீலீலா விளக்கம் அளித்துள்ளதாக கூறப்படும் கருத்துக்கள் தற்போது கவனம் பெற்றுள்ளன. தன்னைப் பற்றி பரவி வரும் அந்த தகவல்களில் எந்தவிதமான உண்மையும் இல்லை என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும், தனக்கு எவ்வித அகந்தையோ, ஈகோவோ கிடையாது என்றும், தன்னுடன் பணியாற்றும் அனைவரையும் மதிக்கும் பழக்கம் கொண்டவர் என்றும் அவர் குறிப்பிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், சமூக வலைத்தளங்களில் வெளியாகும் தேவையற்ற வதந்திகளை உண்மை என நம்ப வேண்டாம் என்றும் ஸ்ரீலீலா ரசிகர்களிடம் கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது. தற்போது தனது முழு கவனமும் நடிப்பில் மட்டுமே இருப்பதாகவும், தொடர்ந்து நல்ல கதைகளையும் கதாபாத்திரங்களையும் தேர்வு செய்து தனது திறமையை வெளிப்படுத்தவே விரும்புவதாகவும் அவர் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.
ஸ்ரீலீலாவின் இந்த விளக்கம் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அவருக்கு ஆதரவாகவும், வதந்திகளை கண்டுகொள்ள வேண்டாம் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Listen News!