• Sep 20 2024

'ஊ சொல்றியா மாமா..' மீண்டும் ரசிகர்களை மயக்க வருகிறார் சமந்தா! பிரம்மாண்டமாக உருவாகும் புஷ்பா 2

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

புஷ்பா படத்தின் 2வது பாகத்தை சுகுமார் இயக்கி வரும் நிலையில், இப் படம் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 15ம் திகதி வெளியிடப்படவுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. 

புஷ்பா படத்தில், நடிகர் அல்லு அர்ஜூன்,ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில், சமந்தா உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருந்தனர்.இப்படம் வெளியாகி  400 கோடி ரூபாய்களுக்கும் மேல் வசூல் செய்திருந்தது.

குறிப்பாக படத்தில் 'ஊ சொல்றியா மாமா' பாடலுக்கு  சமந்தா ஆடிய ஆட்டம் ரசிகர்களை மயக்கித் தான் பார்த்தது.



இந்நிலையில் தற்போது படத்தின் இரண்டாவது பாகத்தை மிகவும் பிரம்மாண்டமான அளவில் படக்குழுவினர் உருவாக்கி வருகின்றனர்.  இதற்கேற்ப படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 



அதுமட்டுமின்றி, புஷ்பா படத்தின் முதல் பாகத்தில் அதிகமான கவனத்தை சமந்தாவின் பாடல் பெற்றது. தற்போது அதன் 2ம் பாகத்திலும் உள்ள ஒரு பாட்டிற்கு சமந்தாவை  ஆட வைக்க படக்குழுவினர் பேச்சுவார்த்தை செய்து வருகின்றனர்.

அதன்படி, மீண்டும் ரசிகர்களை கவரும்வகையில் மீண்டும் சமந்தாவை படத்தில் இணைக்கும் தயாரிப்புத் தரப்பினரின் இந்த முயற்சி கண்டிப்பாக ரசிகர்களை கவரும் என்று எதிர்பார்க்கலாம்.  

Advertisement

Advertisement