• Sep 18 2024

மஞ்ச புடவை கட்டி மட்ட பாடலுக்கு முதலில் ஆட இருந்தது திரிஷா இல்லையாம்! அப்போ அது யார் தெரியுமா?

subiththira / 4 days ago

Advertisement

Listen News!

எங்கடா அந்த மஞ்ச புடவ என விஜய் கூற வரும் பாடல் காட்சிகள் தான் சமூக வலைதளங்கவில் அதிகம் வலம் வருகின்றன. தளபதியின் The Greatest Of All Time திரைப்படம் ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பு கிடைத்த திரைப்படமாகும். 

உலகம் முழுவதும் முதல் நாளில் ரூ. 126 கோடிக்கு மேல் வசூலித்த இப்படம் தற்போது 8 நாள் முடிவில் மொத்தமாக ரூ. 332 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.  இந்த படத்தில் சில நிமிடங்களே வந்தாலும் மாஸ் காட்டியவர் தான் நடிகை த்ரிஷா. மட்ட பாடலில் இதுவரை ஆடாத நடனத்தை ஆடி எல்லோரையும் ஆட வைத்துவிட்டார்.


ஆனால் த்ரிஷாவிற்கு பதில் மட்ட பாடலில் நடனமாட இயக்குனர் வெங்கட் பிரபு நடிகை ஸ்ரீலீலாலை தான் முதலில் அணுகியதாக கூறப்படுகிறது. குண்டூர் காரம் படத்தில் குச்சி மடத்தபெட்டி பாடலின் மூலம் ரசிகர்களை கவர்ந்த இவர் ஒரு பாடலில் மட்டும் நடிப்பதை விரும்பவில்லையாம், அதன்பிறகு த்ரிஷாவிடம் அந்த வாய்ப்பு சென்றுள்ளது.         


Advertisement

Advertisement