• Jul 27 2024

புஸ்ஸி ஆனந்த் வச்ச சூனியம் தான் காரணம்.. எஸ்.ஏ.சந்திரசேகர் புலம்பல்..!

Sivalingam / 3 months ago

Advertisement

Listen News!

விஜய் மற்றும் எஸ்ஏ சந்திரசேகர் ஆகிய இருவரும் கடந்த சில வருடங்களாக பேசிக் கொள்வது கூட என்ற இல்லை என்ற நிலையில் புஸ்ஸி ஆனந்த் தான் இதற்கு  காரணம் என்றும் அவர் வைத்த சூனியம் காரணமாகத்தான் விஜய் தனியிடம் இருந்து ஒதுங்கி இருப்பதாகவும் எஸ்ஏசி நினைப்பதாக பிரபல பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.  

ஆரம்ப கட்டத்தில் விஜய்யின் வளர்ச்சிக்கு எஸ்.ஏ.சி தான் காரணம் என்றால் அதில் மாற்றுக்கருத்து இல்லை. விஜய்யை எப்படியாவது ஒரு பெரிய ஹீரோவாக்க வேண்டும் என்பதற்காகத்தான் அவர் தனது படங்களின் ஹீரோக்கள் எல்லாம் விஜய் பெயரை தான் வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

விஜய் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகி அதன்பின் ஹீரோவாகியதிலும் அவரது பங்கு பெரும் பங்கு உண்டு. ஆனால் அதே நேரத்தில் ஒரு கட்டத்தில் விஜய் பெரிய நடிகராக வளர்ந்து விட்ட பின்னரும் தன்னுடைய கட்டுப்பாட்டில் தான் விஜய் இருக்க வேண்டும் என்று எஸ்எஸ்சி நினைத்தார்.

இதனால் ஒரு கட்டத்தில் தந்தையை வெறுக்க ஆரம்பித்த விஜய் தன்னிச்சையாக முடிவு எடுக்க தொடங்கியதுதான் இருவருக்கும் மேற்பட்ட பிரச்சனை என்று கூறப்படுகிறது. ஆனால் தோளுக்கு மேல் வளர்ந்தவன் தோழன் என்பதை புரிந்து கொள்ளாமல் கடைசிவரை மகன் தனது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்று எஸ்.ஏ.சி நினைத்தது தான் நினைத்தது தான் இந்த பிரிவுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. 

ஆனால் இதையெல்லாம் இன்னும் அவர் புரிந்து கொள்ளாமல் தான் தங்களுடைய பிரிவுக்கு காரணம்  புஸ்ஸி ஆனந்த் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார். மேலும் தனக்கு நெருக்கமானவர்களிடம் புஸ்ஸி ஆனந்த், விஜய்க்கு சூனியம் வைத்து விட்டதாகவும் அதனால் தான் விஜய் தன்னிடம் பேசுவதில்லை என்றும் புலம்பி வருவதாகவும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement