• Feb 05 2026

பழிவாங்கும் படலம் இரண்டாம் பாதி ஆரம்பம்... பிக் பாஸ் வீட்டுக்கு நான் வந்தால் 2 சதிக்காரர்களுக்காக 2 ரெட் கார்ட் வேண்டும்...பிக் பாஸ் பிரதீப் வைரல் டுவிட் பதிவு...

subiththira / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவி பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பற்றி இருந்த பிரதீப் சமீபத்தில் பிக் பாஸ்  நிகழ்ச்சியில் இருந்து ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றபட்டார். அவருக்கு பலரும் வெளியில் ஆதரவு தந்தவனம் உள்ளனர். பிக் பாஸ் வீட்டில் இருந்து அவர் வெளியில் வந்ததில் இருந்தது டுவிட்டரில் பல பதிவுகளை டுவிட் செய்த வண்ணம் உள்ளார். அந்த வகையில் தற்போது இன்னும் ஒரு விடையம் குறித்து டுவிட் செய்துள்ளார். 


கமலஹாசன் தொகுத்துவழங்க கூடிய பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன் 7 தற்போது நடந்து வருகிறது. இந்நிலையில் அதில் போட்டியாளராக பங்கு பற்றிய  பிரதீப் ஆண்டனி "பெண்கள் உரிமைகுறள்" என்று கமலஹாசன் அவர்களால் ரெட் கார்டு வழங்கப்பட்டு வெளியேற்றப்பட்டார்.


அதன் பிறகு பலர் அந்த முடிவுக்கு ஆதர்வு தெரிவித்தாலும் இன்னும் பலர் பிரதிப்புக்கு ஆதரவாக பேசி வருகின்றனர்.  இந்நிலையில் பிரதீப் ஆண்டனி தனது டுவிட்டரில் ரொம்ப சார்ப்பனா புள்ளிங்களா அழ தான் முடியும் நீங்கள் என்னை உள்ளே அனுப்ப நினைத்தால், எனக்கு எதிராக சதி செய்த 2 போட்டியாளர்களை வெளியேற்ற இரண்டு சிவப்பு அட்டைகள் வேண்டும், பிக் பாஸ் 7 நில் 7வது வார கேப்டனாக நான்  இருக்க விரும்புகிறேன் என்ற பதிவை போட்டுள்ளார்.


மேலும் இன்னும் ஒரு பதிவில்  "நீங்கள் எனக்கு ஒரு நல்ல ஆட்டத்தை கொடுத்தால், நான் உங்களுக்கு ஒரு சிறந்த காட்சியைக் கொடுப்பேன் நான் உறுதியளிக்கிறேன், நானும் நடந்துகொள்வேன். ஒரு இடைவேளை முடிச்சுட்டு வர படத்தோட பழிவாங்கும் முறை இரண்டாம் பாதி மாதிரி ஆடுறேன் என கமலஹாசன் மற்றும் விஜய் டெலிவிஷன் பிக் பாஸ் நிகழ்ச்சியை டேக் செய்து இந்த பதிவினை குறிப்பிட்டுள்ளார்.


இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் ஒரு வேலை பிரதீப் மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்கு செல்வாரா என பல கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடைபெறப்போகிறதென்று. 

Advertisement

Advertisement