• May 19 2024

சூர்யாவுக்கு புதிய ஆபத்தை கொடுக்க இருக்கும் நம்பூதிரி- தாராவுக்கு வந்த சிக்கல்- மாரி காப்பாற்றுவாளா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

ஷு தமிழ் தொலைக்காட்சியில் ரசிகர்களைக் கவர்ந்த சீரியலாக ஒளிபரப்பாகிக் கொண்டிருப்பது தான் மாரி சீரியல். அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று வாங்க பார்க்கலாம்.இந்த நிலையில் இன்றைய எபிசோடில் மாரி மணி அடிக்க முயற்சி செய்ய சூர்யா அவளுக்கு உதவி செய்ய இதை அனைத்தையும் தாரா, ஸ்ரீஜா, ஜாஸ்மின் மூவரும் பார்த்து கடுப்பாகின்றனர்.

அப்போது இரு வயதான தம்பதிகள் வர சூர்யா மாரி அவர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க அவர்கள் தங்கள் கழுத்தில் இருந்த மாலையை மாரிக்கும் சூர்யாவுக்கும் அணிவிக்க தாரா உட்பட எல்லோரும் இன்னும் கடுப்பாகி வெளியே வர ஹாசினி புடவை எதுவுமே இல்லை சூர்யா சார் நீங்க மாரியை துணி கடைக்கு அழைத்துச் சென்று புடவை வாங்கி கொடுங்கள் என்று சொல்ல சூர்யாவும் சரி என்று சொல்லி மாரி அழைத்துப் போகிறான். இதனால் தாரா ஸ்ரீஜா இன்னும் கடுப்பாகின்றனர்.


அடுத்து ஸ்ரீஜா நம்பூதிரிக்கு போன் செய்து நடந்த விஷயத்தை சொல்ல உடனே நம்பூதிரி வீட்டில் நான் வந்து சூர்யாவை வைத்து பூஜை செய்கிறேன். அவன் கையில் இருந்து அந்த கயிற்றை கழட்ட வேண்டும். அப்போது மாரி அருகில் இருக்கக்கூடாது, எப்படியாவது சூர்யாவை மட்டும் அழைத்து வாருங்கள் என்று சொல்ல ஜாஸ்மின் நான் அழைத்து வருகிறேன் என்று சொல்லி கிளம்பி செல்கிறாள்.

அப்போது விக்ரம் ஜானகியை வந்து சந்திக்க ஜானகி தாரா சிறுவயதில் சூர்யாவுக்கு கொடுப்பதற்காக ஒரு மேஜிக் பாக்ஸை வீட்டில் வைத்தாள். அதில் ஒரு ரகசியம் இருக்கிறது. அந்த மேஜிக் பாக்ஸ் இருந்தால் நிச்சயம் தாரா தப்பானவள் தான் என்று கண்டுபிடித்து விடலாம் என்று சொல்ல விக்ரம் யோசிக்கிறான்.

அடுத்து சூர்யாவும் மாரியும் துணி கடைக்கு வரும்போது அப்போது லிஃப்டை பார்த்தவுடன் மாரி பயப்பட சூர்யா லிப்ட் எப்படி உபயோகிக்கப்பட வேண்டும் என்று கற்றுக் கொடுத்து உள்ளே அழைத்து செல்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது மாரி சீரியலைப் பார்த்தால் தெரிய வரம் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement