• Apr 24 2024

தீபாவின் திருமணத்தை தடுத்து நிறுத்த திட்டம் போட்ட ரூபாஸ்ரீ- அபிராமியிடம் வசமாக சிக்கிய நிகிதா

stella / 1 year ago

Advertisement

Listen News!

ஷு தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பத்தாம் புதிய சீரியல் கார்த்திகை தீபம். அந்த வகையில் இந்த எப்பிஷோட்டில் என்ன நடக்கவுள்ளது என்று வாங்க பார்க்கலாம்.சிவா தீபாவை பெண் பார்க்க மாப்பிள்ளையை அழைத்து வந்த நிலையில் இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடித்து போக குடும்பம் மொத்தமும் சந்தோஷப்படுகிறது.தீபாவிற்கு மாப்பிள்ளை பார்த்த சிவாவிற்கு தீபாவின் அப்பா நன்றி சொல்ல பிறகு இரண்டு குடும்பமும் தட்டை மாற்றுகின்றனர்.

மறுபக்கம் கார்த்திக் வீட்டில் கார்த்திக் பசியோடு வர மீனாட்சி கார்த்தியிடம் ஐஸ்வர்யா சிஸ்டர் நிகிதா வந்திருக்காங்க அவங்க தான் சமைக்கிறாங்க என்று சொல்ல அனைவரும் சாப்பாட்டுக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்.ஐஸ்வர்யா நிக்கிதாவிற்கு சமைக்க தெரியாததால் ஹோட்டலில் இருந்து ஆர்டர் செய்து அதை அவள் செய்தது போல் மாற்றி டைனிங் டேபிள் வைத்துவிட்டு நிகிதா சமைத்ததாக பொய் சொல்ல அனைவரும் சாப்பிடுகின்றனர். 


அப்போது வாசலில் ஹோட்டல் பார்சல் கவர் இருக்க வாட்ச்மேன் திட்டிக் கொண்டிருக்க சத்தம் கேட்டு வந்த அபிராமி அதை பார்த்ததும் சந்தேகப்படுகிறாள்.உடனே நேராக போய் சாப்பாட்டை மோந்து பார்த்து நிகிதாவிடம் உண்மையை சொல் நீ சமைச்சியா இல்ல ஓட்டலில் கொண்டு வந்தாயா என கேட்க வேறு வழி இல்லாமல் நிகிதா தவறை ஒப்புக் கொள்கிறாள். அபிராமி நிகிதாவை திட்டி வீட்டை விட்டு வெளியே போக சொல்ல நிகிதா அப்செட்டாக போக மீனாட்சி சந்தோஷப்படுகிறாள்.

அடுத்து தர்மலிங்கம் வீட்டில் இருக்க அப்போது ரூபாஸ்ரீ நேராக வந்து எதுக்கு தீபாவுக்கு மாப்பிள்ளை பார்த்து இருக்க என்று கேட்க தர்மலிங்கம் பொண்ணுக்கு கல்யாணம் பண்றதுக்காக தான் வேற எதுக்கு என்று சொல்ல கல்யாணத்தை நிறுத்துங்க, ரூபா ஸ்ரீக்காக பாடுவதற்கு நீங்கதான் வாக்குறுதி கொடுத்து இருக்கீங்க, என பேச தர்மலிங்கம் தீபாவுக்கு கல்யாணம் செய்ய போவதாக சொல்ல ராஜ ஸ்ரீ 10 லட்சம் ரூபாய் கொடுத்துட்டு கல்யாணம் பண்ணுங்க என சொல்லி அதிர்ச்சி கொடுக்கிறாள்.இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அடுத்த எப்பிஷோட் பார்த்தால் தெரிந்து விடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement