• Mar 10 2025

திரையுலக கனவை நிறைவேற்றியது இவர் தான்...! மணிகண்டனின் உருக்கமான பேச்சு!

subiththira / 4 hours ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் தற்போது திறமை வாய்ந்த நடிகராக உருவெடுத்திருக்கும் மணிகண்டன், சமீபத்திய நேர்காணலில் தனது திரையுலக பயண வருகைக்கு முக்கிய காரணி இயக்குநர் பா. ரஞ்சித் எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில் "நான் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று கனவு கண்டாலும், அதற்கான வாய்ப்பை கிடைக்கவில்லை எனினும் என்னை நம்பி ‘காலா’ படத்தில் நடிக்க வைத்தது  பா. ரஞ்சித் தான்" என்று உருக்கமாக கூறினார். 2018ல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பா. ரஞ்சித் இயக்கிய ‘காலா’ பலரின் வாழ்க்கையை மாற்றிய படம். அந்தப் படத்தில் மணிகண்டன் ஒரு முக்கியமான துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.


அந்த படத்தின் வெற்றியால், மணிகண்டனுக்கு திரையுலகில் மிகப்பெரிய திறமை வாய்ந்த நடிகர் என்ற பெயர் கிடைத்தது. இந்த படம் தான் அவருக்கு அடுத்தடுத்து முக்கியமான பட வாய்ப்புகளை உருவாக்கி தந்தது. அத்துடன் ‘காலா’ படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருந்தாலும் தற்போது மணிகண்டன் தனது அசத்தலான நடிப்பால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.


அதன்பிறகு, அவர் பல வெற்றிப் படங்களில் முக்கிய கதாபாத்திரங்களாக நடித்ததோடு இப்பொழுது திறமைமிக்க நடிகராக வளர்ந்துள்ளார். பா. ரஞ்சித் இதற்கு நேரடியாக பதில் கூறவில்லை என்றாலும், சமீபத்திய நிகழ்ச்சியில், "நாம் யாருக்கும் வாய்ப்பு கொடுக்கும்போது, அவர்களின் திறமை வளர வேண்டும் என்பதில் கவனமாக இருப்பேன். அந்தவகையில் மணிகண்டன் அதில் சாதித்திருக்கிறார்" என்று கூறினார்.

Advertisement

Advertisement