• Sep 19 2025

அருணால் சீதா-மீனாவுக்கு இடையே ஏற்பட்ட விரிசல்! பார்வதிக்கு வந்த லவ் டார்ச்சர்! டுடே ரிவ்யூ

subiththira / 3 weeks ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று, சீதா மீனாவை போன் பண்ணி வீட்ட வரச் சொல்லுறார். வீட்ட வந்த மீனா சீதாவப் பார்த்து எதுக்காக வர சொன்னீ என்று கேட்கிறார். அதுக்கு சீதா நேற்று நடந்தது உனக்குத் தெரியாதா என்று கோபமாக கேட்கிறார். மேலும் மாமா தான் இதுக்கெல்லாம் காரணம் என்று சொல்லுறார். அதைக் கேட்ட மீனா கோபப்படுறார்.


இதனைத் தொடர்ந்து சத்யா சீதாவப் பார்த்து முத்து மாமா எதுக்காக இப்புடி எல்லாம் செய்யப்போறார் என்று சொல்லுறார். அதைப் பார்த்த மீனா அம்மா நீங்க எதுக்காக சண்டை பிடிக்கிறீங்க என்று கேட்கிறார். பின் சீதா உங்க கிட்ட எல்லாம் பேசி எந்தப் பிரயோசனமும் இல்ல என்று சொல்லிட்டு அங்கிருந்து கிளம்புறார். அதைப் பார்த்து மீனா அம்மா அழுது கொண்டிருக்கிறார். 

இதனைத் தொடர்ந்து சீதா ஹாஸ்பிடலில போய் இதையே ஜோசிச்சுக் கொண்டிருக்கிறார். மறுபக்கம் பார்வதி யோகா கிளாஸுக்கு கொஞ்ச பேர் தான் வந்திருக்காங்க என்று சோகமாக சொல்லுறார். அதைக் கேட்ட விஜயா இனிமேல் தான் ஆட்கள் சேரும் என்கிறார். பின் விஜயா அங்க வந்தவங்களுக்கு யோகா சொல்லிக் கொடுக்கிறார்.


இதனை அடுத்து யோகா கத்துக்க வந்தவர் பார்வதி கிட்ட propose பண்ணுறார். அதைக் கேட்ட பார்வதி வந்த வேலையை பாருங்க என்று சொல்லுறார். இதுதான் இன்றைய எபிசொட். 

Advertisement

Advertisement