• Aug 03 2026

மாரீசன் படம் சிரிக்க வைக்கும், சிந்திக்க வைக்கும்..! – கமல்ஹாசன் சொன்ன வார்த்தைகள் வைரல்!

shali / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றாக வலம் வரும் ‘மாரீசன்’, நகைச்சுவையின் புதிய வெளிச்சமாக நாளை (ஜூலை 25) திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. தமிழ்நாட்டு மக்கள் மனங்களில் சிரிப்பின் தூதராக நீண்ட காலமாக திகழும் வடிவேல், இப்படத்தின் கதாநாயகனாக நடித்து ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளார்.


இந்நிலையில், நேற்று இப்படத்திற்கான சிறப்பு காட்சி ஒன்றில் கலந்துகொண்ட உலகநாயகன் கமல் ஹாசன், படம் குறித்து தனது பாராட்டுக் கருத்தை வெளியிட்டு, சமூக வலைத்தளங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளார்.

‘மாரீசன்’ திரைப்படம் நகைச்சுவை, சமூக விமர்சனம் மற்றும் உணர்ச்சி கலந்து உருவாக்கப்பட்ட புதிய கான்செப்ட் படம் என்று கூறப்படுகிறது. வடிவேலு நடிக்கும் முக்கிய கதாபாத்திரம் மூலம், சமூகத்தின் பல்வேறு நிலைகளையும், மனித உறவுகளின் உண்மை முகங்களையும் நகைச்சுவையின் வழியாக சொல்லும் ஒரு பயணமாக அமைந்துள்ளது.


இப்படத்தின் இயக்குநராக சுதீஷ் சங்கர் பணியாற்றியுள்ளார். சிறப்பு காட்சிக்குப் பிறகு, கமல் ஹாசன், "படத்தின் கதை என்னை சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்தது. அருமையான படைப்பை கொடுத்த படக்குழுவுக்கு பாராட்டுத் தெரிவித்துள்ளேன். நகைச்சுவை வாயிலாக சமூகத்தின் இருண்ட பக்கங்களின் மீதான தெளிவான பார்வையும் உள்ளது. இயல்பாகவே மக்களை ஈர்க்கும் புதுமையான சினிமா." என தெரிவித்துள்ளார். இது தற்பொழுது வைரலாகி வருகின்றது. 

Advertisement

Advertisement