• Feb 05 2026

தமிழ் சினிமாவில் இப்படி ஒரு காதல் கதையா? ரசிகர்களைக் கவரவரும் ‘சரீரம்’..!

subiththira / 4 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா எப்போதுமே காதலை மையமாக கொண்ட பல படங்களை வழங்கி வருகின்றது. ஆனால், காதலுக்காக உயிர் தியாகம் செய்வதை மட்டுமே நாம் இத்தனை நாட்களாக பார்த்திருக்கிறோம். ஆனால் இப்போது, அதைவிட வித்தியாசமாக, காதலுக்காக "உடலைத் தியாகம்" செய்யும் ஒரு புதுமையான கதையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் தான் "சரீரம்".


இந்த படம், வெறும் காதல் கதை அல்ல, மனித உடலின் மதிப்பும், காதலின் தியாகமும், சிந்திக்க வைக்கும் உணர்வுமிக்க படைப்பு என்ற வகையில், ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இயக்குநர் G.V. பெருமாள் எழுதி, இயக்கி, தயாரித்துள்ள "சரீரம்" திரைப்படம், புதிய கதைக்களத்தையும், சிக்கலான உணர்வுகளையும் தழுவிய ஒரு கலைப்படைப்பு.


இது ஒரு பாரம்பரியமான காதல் கதை அல்ல. இதில் காதலுக்காக, ஒருவர் தனது உடலை தியாகம் செய்யும் ஒரு அன்பின் ஆழத்தை சொல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இது பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தும் ஒரு மன அழுத்தக்குரிய காதல் பயணமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களை தர்ஷன் மற்றும் சார்மி எனும் இரு புதுமுகங்கள் ஏற்றுள்ளனர். புதியவர்கள் என்றாலும், அவர்கள் நடித்த காட்சிகள் மிகவும் உணர்வுபூர்வமாகவும், இயல்பாகவும் அமைந்துள்ளதாக டீசர் மற்றும் முன்னோட்ட வீடியோக்கள் மூலம் தெரியவருகிறது.

"சரீரம்" திரைப்படம், செப்டம்பர் 26, 2025 முதல் தமிழகத்திலுள்ள அனைத்து முக்கிய திரையரங்குகளிலும் வெளியாக உள்ளது. அந்தவகையில், தியேட்டருக்குள் சென்று உணர்ச்சியால் நிறைந்த ஒரு காதல் பயணத்தை அனுபவிக்க தயாராகுங்கள்! என படக்குழுவினர் தற்பொழுது தெரிவித்துள்ளனர். 

Advertisement

Advertisement