• Jul 27 2024

ஹோட்டலில் நடிகையுடன் கள்ளத்தொடர்பு.. கையும் களவுமாக கணவனை பிடித்த நடிகரின் மனைவி..!

Sivalingam / 1 month ago

Advertisement

Listen News!

பிரபல நடிகர்  ஹோட்டலில்  ரூம் போட்டு நடிகையுடன் கள்ளத்தொடர்பில் இருந்ததை அவரது மனைவி கையும் களவுமாக பிடித்ததை அடுத்து இருவரும் தற்போது விவாகரத்து கேட்டு நீதிமன்றத்திற்கு சென்று இருப்பதாக கூறப்படுகிறது.

கன்னட திரையுலகின் பிரபல நடிகர் யுவா ராஜ் குமார் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீதேவி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி சில ஆண்டுகள் கூட்டு குடும்பமாக வாழ்ந்த நிலையில் தற்போது ஸ்ரீதேவி வெளிநாட்டில் படித்துக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் விடுமுறைக்காக இந்தியா வந்தபோதுதான் தன்னுடைய கணவருக்கும் ஒரு பிரபல நடிகைக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதை கேள்விப்பட்டு அவர்கள் தங்கியிருந்த  ஹோட்டல்    அறைக்கு நேராக சென்று கையும் களவுமாக தனது கணவரை பிடித்துள்ளதாக தெரிகிறது. இது குறித்து வாக்குவாதம் இரு தரப்பிற்கு இடையே இருந்த நிலையில் தான் தற்போது இருவரும் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

தனது கணவரையும் அந்த நடிகையையும் கையும் களவுமாக  ஹோட்டலில் பிடித்து விசாரித்தேன் என்றும் இது குறித்து கேள்வி எழுப்பிய போதுதான் என் மீது யுவா பல்வேறு குற்றச்சாட்டுகளை பொய்யாக கூறுகிறார் என்றும் ஸ்ரீதேவி அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் தனது மனைவி ஸ்ரீதேவி தன்னை கொடுமைப்படுத்துவதாகவும் தனது பணத்திற்காக தான் அவர் என்னை திருமணம் செய்து கொண்டிருப்பதாகவும் தன்னுடைய குற்றச்சாட்டாக முன்வைத்துள்ளார். இந்த இரண்டில் எது உண்மை என்று தெரியாமல் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

Advertisement

Advertisement