• Apr 28 2024

நடிகர் விஜயகாந்திற்கு அந்த இடத்தில் எலும்பு இல்லையா?- அதிர்ச்சித் தகவலைக் கூறிய அவரது மகன்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 90 மற்றும் 200ம் ஆண்டுகளில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் தான் நடிகர் விஜயகாந்த்.நடிப்பின் மீது இருந்த ஆசையால் பல போராட்டங்களுக்கு பிறகு திரைப்படங்களில் நடிக்க வந்தார். இவர் இனிக்கும் இளமை திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகினார்.

இதனைத் தொடர்ந்து தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு ஹிந்தி ஆகிய மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்து வந்தார். 20க்கும் மேற்பட்ட படங்களில் போலீஸ் அதிகாரியாக நடித்ததோடு பல திரைப்படங்களில் இரட்டை வேடத்திலும் நடித்து அசத்தியிருப்பார்.


எந்த ஒரு சண்டை காட்சி என்றாலும் டூப் இல்லாமல் நடிப்பது, புள்ளி விவரங்களை அசால்டாக கூறுவது என விஜயகாந்த் ஒரு தனி ஸ்டைலில் பயணித்தார்.மேலும் பிரேமலதா என்பவரை திருமணம் செய்துகொண்ட இவருக்கு  பிரபாகரன் மற்றும் சண்முக பாண்டியன் என இரு மகன்கள் உள்ளனர்.

ஒரு வீடியோவில் சண்முக பாண்டியன், ஒரு திரைப்படத்தின் சண்டைக் காட்சியில் டம்மி துப்பாக்கி வைத்து சுடும் காட்டி இருந்ததாம். ஆனால் அதை சுடுபவர் திடீரென துப்பாக்கியை அழுத்த அது விஜயகாந்தின் கண் புருவத்தில் துளைத்து விட்டதாம்.

இப்போதும் கூட விஜயகாந்துக்கு அந்த இடத்தில் எலும்பு இருக்காது என்று தெரிவித்திருக்கிறார். இதைக்கேட்ட ரசிகர்களுக்கு இது ஷாக்கிங் தகவலாக இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.





Advertisement

Advertisement

Advertisement